Pages

Sunday, December 26, 2010

தரகர் 2

தலை தெறிச்சு வந்த தரகரை பார்த்து சாமியார் சொன்ன பதில்.கல்யாணம் பண்ணி
கூட்டி  கிட்டு வருகின்ற மருமகள் நைட் பாயை விறுச்சு படுத்த பின்னர் ,மாமியார் ஏம்மா மத்தியானம்
மாடியில் காய போட்ட வடகத்தை எடுத்தாச்சா ?, அத்தை எல்லாம் அப்பவே எடுத்தாச்சு
அத்தை. ஏம்மா மீதம் உள்ள பாலை உரை ஊத்தியாட்சா?  அப்பவே ஊதியாச்சு அத்தை.
ஆமா மாடி மேல  துணி காய போட்டியே எடுத்தாட்சா  ?  எடுத்தாச்சு அத்தை . இப்புடி மாமியார் கேட்கின்ற கேள்விக்கு படுத்த பாயை விட்டு எழாமல் பதில் சொல்லும் சமத்தான மருமகள் தான் தனக்கு வேணும்முன்னு ஆச்சி சொல்லி இருக்காங்க.
தரகர் தன்னோட இன்னொரு குழப்பத்தையும் சொல்லி அதற்கும் விளக்கம் கேட்டார் . தன்னோட மகனை பத்தி சொல்லும் பொழுது உட்கார்ந்தா உட்கார்ந்த இடத்தை விட்டு எளுந்திருக்கமாட்டன் அப்புடீன்னு சொன்னகளே அதுக்கு என்ன
அர்த்தம் சாமியாரே ?அதாவது உயர் பதவியில் உள்ளவங்க யாருக்ககாகவும்   
எழுந்து நின்னு பதில் சொல்ல தேவை இல்லை, தன்னோட மகன் பெரிய வேலையில் இருக்கிறதா ஆச்சி சொல்லி இருக்காங்க.இது எப்புடி இருக்கு ?

தரகர்

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா,இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு ஓடி போலாமா !நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கிற காலம் இப்புடித்தான் இருக்கு. ஆனா பண்டைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் திருமணம் என்றால்,புரோக்கர் உதவியோடதான் செய்வாங்க.காரைக்குடியில் வசிக்கிற வள்ளியம்மை ஆச்சி தன்னோட மகனுக்கு ஒரு வரன் வேணும் என்று சொல்ல, புரோக்கர் ஆச்சியை பார்த்து பையன்னோட விவரம் சொல்லுங்க,அப்புறம் உங்களுடைய  மகனுக்கு பார்க்கிற பொண்ணு  எப்புடி இருக்கனும் சொல்லுங்க ஆச்சி.என்றார் தரகர். அதுக்கு ஆச்சி என்ன சொன்னாக
தெரியுமா. படுத்தா  பாயை விட்டு எழுந்திருக்காத மருமகள் வேணும் என்று சொன்னங்க. தரகருக்கு தலை சுத்திருச்சு.என்னடா இது ஆச்சி என்ன சொல்லுறாங்கன்னு ஒன்னும் புரியாம தரகர்,ஆச்சி உங்க பையன பத்தி சொல்லுங்க,
ஏன்னா பொண்ணு வீட்டுல விவரம் சொல்லணும்,என்று சொன்ன தரகருக்கு ஆச்சி
சொன்ன பதில் என்ன தெரியுமா.யோவ் தரகரே உட்கார்ந்தா உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திருக்க மாட்டான் என்னோட பையன்.அவனுக்குதான் படுத்தா  பாயை விட்டு எழுந்திருக்காத மருமகள் வேணும் என்று சொன்னங்க.தரகர் குழம்பி
போயி ஆச்சியும் வேணாம் அவுங்களோட சவகசமும் வேணாம் சாமீன்னு ஒரே
ஓட்டமா ஓடிப்போனவர் எங்க நின்னாருன்னு பார்த்த அந்த ஊரில் உள்ள ஒருசாமியாரோட குடில் வாசல் வந்துதான் நின்றார்.  தரகர் சொன்ன தகவலை  கேட்ட சாமியார் அதனுடைய விவரத்தை சொன்னார்.
 . இன்னும் பூக்கும்  

Friday, December 17, 2010

மரம் வளர்ப்போம்

மரம் வளர்ப்போம் !மழை பெறுவோம் !என்ற வாசகத்தை அணைத்து வாகனத்தின்



பின்னால் பார்த்திருப்போம், ஆனால் எத்தனை நபர்கள் மரம் வளர்ப்பதில் ஆர்வம்
காட்டுகிறார்கள் என்று பார்த்தோமேயானால்,விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான்,இருப்பார்கள் .மரம் வளர்ப்போம் என்ற வாசகத்தை மட்டும் வாகனத்தின் பின்னாலும்,சுவற்றின் மேலும் எழுதி வைத்து விட்டால் மரம் வளர்ந்து விடுமா.
புதுக்கோட்டை மாவட்டத்தின் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த அருமை சகோதரர் திரு.டாக்டர் ரவிசந்திரன் அவர்களுக்கு கட்டாயம் நாம் நன்றிசொல்லியே ஆகவேண்டும்
ஏன் என்றால்,2010 ஆம் ஆண்டை பொறுத்தவரை, மரம் வளர்ப்பதில் அதிக ஆர்வம்
காட்டியவர் என்ற பெருமை அவரையே சேரும் ,புதுக்கோட்டை மாவட்டத்தில்
39 வார்டுகள் உள்ளன.  அணைத்து பகுதி மக்களுக்கும் சுமார் 25 ஆயிரம்  இலவச மரக்கன்று கொடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்ற
முயலும்  கொடைவள்ளல் டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !




Wednesday, December 15, 2010

சித்தி விநாயகர் ஆலயம்

புதுக்கோட்டை மாவட்டம் டவுன் சாந்தநாதபுரம் மூன்றாம் வீதியில் அமைந்திருக்கும்
சித்தி விநாயகர் ஆலயம் கட்டுமான பணிகளில் உள்ளது .மேற்படி ஆலயத்தின்
கட்டுமான பணிக்கு தங்களால் இயன்ற  நிதி உதவி செய்ய விருப்பம் உள்ள நல்ல உள்ளங்கள்,நிதி உதவி வழங்கி விநாயகர் அருள் பெறுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறோம் .மிக பழமையான விநாயகர்,என்பது குறிப்பிட தக்கது,நிதி உதவி வழங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண் 9659609101

Monday, December 13, 2010

திரு R .நெடுஞ்செழியன் MLA

புதுக்கோட்டை மாவட்டத்தின்  பெருமைகளில் ஓன்று,தெருக்கள் அனைத்தும் நேராக
ஒரே கட்டமைப்பில் இருக்கும் .இங்கு சாதி சண்டை கிடையாது என்பது பெருமைக்குரிய
விஷயம் .புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் மற்றொரு பெருமைக்குரிய விஷயம் அருமை சகோதரர் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் திரு  R .நெடுஞ்செழியன்
அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்,ஏனெனில் அவரை போல மக்கள்  பணியில் இன்முகத்துடன் பணியாற்ற யாராலும் முடியாது .மிகவும் எளிமையானவர்
கந்தர்வகோட்டை அருகில் உள்ள துருசுபட்டி என்ற குக் கிராமத்தில் பிறந்த MLA நெடுஞ்செழியன் அவர்கள் மக்களின்  அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதில் எத்தனையோ போராட்டங்களை நடத்தி மக்களின் அடிப்படை தேவைகளை
பெற்றுள்ளார்.மக்களின் நலனில்   அதிக அக்கறை கொண்டவர் .

Thursday, December 9, 2010

சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயபாஸ்கர்

மக்களின் அடிப்படை தேவைகளில் மிக முக்கியமான ஓன்று . உண்ணஉணவு,உடுக்க உடை,இருக்க இடம்,இவற்றை தாண்டி மிக முக்கியமானது,குடி தண்ணீர் ஆகும் .சுமார் 20  ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைகூறுகிறேன். எங்கள்  வீட்டில் கிணறு     இருந்தது,ஆனால் கிணற்றில் தண்ணீர் என்பது மழை காலங்களில்    மட்டும் தான் இருக்கும்.வெயில்  காலங்களில் வீட்டில் துணி துவைப்பதற்கு,குளிப்பதற்கு தண்ணீர் எடுக்க,தெருவில் உள்ள  அடி பைப்பை  நம்பித்தான் வாழ்க்கை ஓடியது .அடிபைப்பில் தண்ணீர் எடுக்க இரவு நேரத்தில் வெகுநேரம் ஆகிவிடும் .அதன் பின்னர் வீட்டில் போர் (போர் வெல்) போட்டோம்.இருப்பினும் அடி பைப்பில் தண்ணீர் அடித்து எடுப்பது என்பது மிகவும் சிரமமான ஓன்று .புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில்   39 வார்டுகள்  உள்ளன . 39 வார்டு மக்களும் பயன் பெரும் வகையில் மக்களின் அடிப்படை தேவையான தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டவர் என்ற பெருமை, அருமை சகோதரர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் விஜயபாஸ்கர்
அவர்களையே சேரும்.39 வார்டுகளிலும் மினி பவர் பம்ப் அமைத்து,மக்கள் சிரமம் இல்லாமல் தண்ணீர் பெற உதவியவர் டாக்டர்
அவர்கள்தான்   .மிக சிறுவயதில் புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய பெருமை டாக்டர் அவர்களையே சேரும்.
அரசினர் பொது மருத்துவ மனைக்கு CT ஸ்கேன் பெற்று தந்த பெருமை மட்டும் அல்லாது நகரின்  மிக முக்கியமான இடங்களில் டிராபிக் சிக்னல் பெற்று தந்த பெருமையும்  அவரையே சேரும்.டாக்டர் அவர்களின் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

Tuesday, December 7, 2010

கனவு

எனது இதழ்கள் அவளின் செவ்விதல்களில்
கவி பாட ,எனது மூச்சு காற்று அவளுக்கு
சுவாச காற்றாக மாற !எனது இரண்டு கைகளும்
அவளின் நீண்ட கருங் கூந்தலில் களியாட ,
எங்கிருந்தோ ஓர் கை வந்து என்னை உசுப்பியது
விழித்து பார்த்தேன் விடியல் வேலை கனவு

பக்தன்

ஒ பெண்ணே   எனது இதயத்தில்
ஓர் இதயக்கோவில் கட்டி உள்ளேன் !
என் இதயத்தில் கோவில் உள்ளதே தவிர
தெய்வம் இல்லை ,
நீ வருகிறாயா என் இதய தெய்வமாக !
அன்புடன் உன் ஒரே பக்தன் .
காத்திருகின்றேன் உனக்காக காலம் வரும்மென !

பாவை

இதழோர சிரிப்பை இலவசமாக தந்து ,
விழியோர பார்வைகளால் காதல் ,
விதை விதைத்தவளே !
பாவை உன்னை பார்த்தவுடன்
பைந்தமிழ் பேசும் நாவு ஒலிக்கவில்லையே !
உனது பாத  முத்திரைக்கு
எனது கண்கள் பன்னீர் சிந்தவும் தயார் !
கண்ணே உனது பாதம் பட்ட இடங்களில் எல்லாம்
நான் சாதம் போட்டு சாப்பிடவும் தயார் !
ஒ  பெண்ணே    உனது விழிகள் என்ன
AK 47 துப்பாக்கியா என் இதயம் எல்லாம் பொத்தள்கள்.!

Sunday, December 5, 2010

வணங்கும் பொழுது

  1. ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசிக்கும் வேளையில் ,அதாவது கோவில் உள்ளே யாருக்கும் கை எடுத்து வணக்கம் சொல்லல் ஆகாது .
  2. ஆலயத்தில் இறவனை நேரடியாக   அதாவது நேருக்கு நேர் நின்று வணங்கி வழிபடுதல் கூடாது .
  3. இறைவனை நோக்கி கை எடுத்து  கரங்களை தலைக்கு மேல் வைத்து வணங்குதல் நலம் .
  4. கால் கழுவும் பொழுது ஒரு கால் மேல் மற்றொரு கால் வைத்து கழுவுதல் கூடாது .
  5. குளிக்கும் பொழுது ஆடையின்றி குளித்தல் ஆகாது .
  6. காலையில் எழுந்தவுடன் அவரவர் கைகளில் விழித்தல் நலம் தரும் .
  7. தாய் தந்தை வாக்கு பலிக்கும் .பெற்றோரிடம் அனுசரணையாக நடுந்து கொள்ளவேண்டும் .
  8. தர்மம் தலை காக்கும் ,வயதானவர்களுக்கு உதவ நலம் பயக்கும் .
  9. தினமும் அதிகாலை எழுந்து குளித்த பின்  வீட்டில் உள்ள கடவுள் படத்தின் முன் அகல்விளக்கு ஒன்றில் தீபம் ஏற்ற வீட்டில் உள்ள பிணி பீடை அகலும் .
  10. 7  1 / 2 சனி நடக்கும்  காலத்தில் உடை ,உடல் ,உள்ளம் தூய்மையாக இருக்க கெடுபலன் குறைந்து நற்பலன் கூடும் . 

ATM கார்டு

வங்கியில் கணக்கு வைத்து கொள்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமான மற்றும் அத்தியாவசியமானது ஆகும் .கணக்கு வைத்துள்ள நபர்கள் ATM கார்டு வாங்கி கொண்டால் பணம் எடுப்பது மிக சுலபமாக இருக்கும் .ATM  கார்டு ஐ பயன் படுத்தும் பொழுது அதாவது  கார்டு மெசின்   உள்ளே  சென்றவுடன்   ,உங்களின் ரகசிய பின் நம்பர் ஐ கேட்கும் அதன் பின் நீங்கள் எடுக்க வேண்டிய  தொகையை கேட்கும் ,எடுக்க வேண்டிய தொகையை குறிப்பிட்ட பின் பணம் ATM மெசின்இல் இருந்து வெளியில் வரும் .பணம் வெளியில் வந்தவுடன் தொகையை எடுத்து விடவேண்டும் ,பணத்தை எடுக்காமல் தாமதிக்கும் பட்சத்தில் அதாவது ,WOULD YOU LIKE TO do ANOTHER TRANSACTION என கேட்கும் MACHINE இல் இருந்து வெளியில் வரும் பணத்தை எடுக்காமல் YES என்றோ NO  என்றோ அழுத்தும் பட்சத்தில் பணம் திரும்ப உள்ளே சென்று விடும் ,அப்புறம் பேங்க் மேனேஜர் நமக்கு நல்லா பழக்கம் ஆகிடுவார்,ஏன்ன உள்ளே போன பணத்தை குறிப்பிட்ட  வங்கியின் மேனேஜர் வசம் தான் புகார் கொடுத்து பெற வேண்டும் .மக்கள்  ATM  CENTER உள்ளே சென்றவுடன் கவனத்தை முற்றிலும் பணம் எடுப்பதில் மட்டுமே செலுத்த வேண்டும் .

Thursday, December 2, 2010

LOVE

டீன் ஏஜ் பசங்க எல்லாம் லவ் லவ் என்று சொல்கிறார்கள் , லவ் என்ற வார்த்தையை பயன் படுத்துவார்கள் ,ஆனால் லவ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருப்பார்கள் .என்னுடைய கற்பனைக்கு எட்டிய ஒரு அர்த்தம் ஒன்றை  சொல்கிறேன்      L -LIKE                                                                                                                                  
                  O -OBSERVE
                  V -VERIFY  
                   E -ENJOY அதாவது நல்லவர்களை  விரும்பு ,புரிந்துகொள் ,அதன் பின் அவர்   நமக்கு இணை ஆனவர  என சரிபார் ,பின்னர் அவருடன் சந்தோசமாக வாழ்கையை அனுபவி . 

ஆங்கிலம்

நாம் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் மொழி நமக்கு தாய் மொழி ஆக இருந்தாலும் ,ஆங்கிலம் தெரியாமல் இனி இந்த உலகில்  வாழமுடியுமா என்பது சந்தேகம் தான் ,ஏனெனில் ஆங்கிலம் இன்று மக்களின் சுவாசமாக மாறிவிட்டது ,ஆங்கிலம் இல்லாமல் வாழ்வது கடினம் தான் ,சாதாரணமாக  வங்கிகளில் பணம் போட வருபவர்கள் ஆங்கிலத்தில் உள்ள ஸ்லிப்பில் தான் பூர்த்திசெய்ய வேண்டிய நிலை உள்ளது ,எனவே ஆங்கிலம் நம் வாழ்விற்கு அத்தியாவசியமான ஓன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது .மறுத்தால் மறுப்பவர் தனி உலகத்தில் தான்  வசிக்க முடியும் .ஆங்கிலத்தை கற்று  கொள்வது கடினமானதா என கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லவேண்டும் ,ஏனெனில் ஆங்கிலம் மிகவும் எளிமையான மொழி .கற்றுகொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும் குறுகிய காலத்தில் கற்று கொள்ளலாம் .ஆங்கிலத்தை கற்று கொள்ள ஆர்வம் மட்டும் போதுமா என்று கேட்டால் போதும் என்று தான் சொல்லலாம் .எந்த வயதில் வேண்டுமானாலும்  கற்கலாம்.

Wednesday, December 1, 2010

M TV

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் லோக்கல் சேனல் களில் ,ஒன்றான M டிவி தனது தனி தன்மையை நிருபித்துவிட்டது ,சாட் லைட் சேனல்களுக்கு நிகராக ஓளிபரப்பாகும்   BREAKING நியூஸ் கடுமையான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது ,புதுக்கோட்டை மாவட்டத்தில்  பணியாற்ற கூடிய மிக  முக்கியமான அரசு அதிகாரியும் மேற்படி செயலுக்காக Mடிவியை  பாராட்டியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது  .கடின உழைப்பு கட்டாயம் வெற்றி பெரும் .

அண்ணன் மோகன் அவர்களின் சேவை விண்ணை தொட்டது

ராஜா ,மணி ,சுரேஷ் கண்ணன் ஆகியோர் இணை பிரியாத நண்பர்கள் .அவர்கள் தினமும் அறட்டை அடித்துக்கொண்டு அமர்ந்திருப்பது மாவட்ட மைதானத்தில் தான் .அங்குதான் போலீஸ் தொந்தரவு இருக்காது என இரவில்   நீண்ட நேரம் அமர்ந்திருப்பது வழக்கம் .வழக்கம் போல் அரட்டை   கச்சேரி ஆரம்பமாகி அவர்களின் பேச்சு வானத்தை பற்றியும் ,அதில் உள்ள நட்சத்திரங்கள் பற்றியும் அரட்டை அரங்கம்  வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தது ,திடீரென வானத்தில் பிரகாசமான ஒளி அவர்களை நோக்கி வந்தது ,நண்பர்கள் அனைவரும் பயந்து நடுங்கி  விட்டனர்.நேரம் ஆக ஆக மைதானத்தில் மிக அருகில் பறக்கும் தட்டு ஓன்று காதை கிழிக்கும் ஒலியுடன் தரை இறங்கியது .நடுக்கத்துடன் நால்வரும் நின்று கொண்டிருக்க ,பறக்கும் தட்டின் கதவுகள் திறக்கப்பட்டு அதில் இருந்து மூக்கு நீள மான நான்கு  நபர்கள் ,அவர்கள்   அருகில் வந்தனர்     .நண்பர்கள்  நால்வரும் நடுக்கத்துடன் நின்றனர் ,அருகில் வந்த வேற்று கிரகத்தினர் ,பயப்பட வேண்டாம் நண்பர்களே ,உங்களிடம் ஒரு உதவி கேட்டு வந்துள்ளோம் எங்களது மொழியும் ,உங்களுடைய மொழியும் ஒன்றாக இருப்பதால் உங்களின் உதவியை நாடி வந்துள்ளோம் ,நண்பர்கள் நால்வரும் திகைத்து ,சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும் என கேட்டனர் ,புதுக்கோட்டை நகராட்சியின்   நகர் மன்ற  உறுப்பினர் அருமை சகோதரர் திரு எம் .மோகன் அவர்களையும் அவர் தனது பகுதி மக்களுக்காக செய்து கொண்டிருக்கும் சிறந்த சேவைகளை பாராட்டி அவரை கௌரவ படுத்த வேண்டும் ,தயவு செய்து அவரை நாளை இதே நேரத்தில் இதே இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம் என சொல்லி பணிவுடன் நின்றனர் .நண்பர்கள் நால்வரும் சரி என மகிழ்ச்சி உடன் சொல்ல ,பறக்கும்  தட்டு பறந்து சென்றது .அண்ணன் மோகன் அவர்களின் சேவை விண்ணை தொட்டது என்பது உண்மைதான் ,நாமும் அண்ணன் மோகன் அவர்களின் சேவையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் .

Monday, November 29, 2010

பூசணி திருடன்

நம்மில் பலர் சில நேரங்களில் முழு பூசணி காயை சோற்றில் மறைக்கிறான் என சொல்வதை கேட்டிருப்போம் ,ஆனால் அதற்கு அர்த்தம் என்ன என கேட்டால் சரியான பதில் சொல்ல மாட்டார்கள் . அதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்றால் .ஒரு கிராமத்தில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான் ,அவன் அதிகமாக திருடுவது பூசணி காயை ,அவனை கிராம மக்கள் பூசணி திருடன் என்று தான் அழைப்பார்கள் .திருடனுக்கு பின்னர் அவனது தலை முறை அத்துணை பேருக்கும் இந்த பட்டம் தொடர்ந்தது .அவனது அடுத்த தலை முறை மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர் ,இருப்பினும் பூசணி திருடன் வீடு என்று தான் அவர்களது வீட்டை மக்கள் சொல்லுவார்கள் .எப்படி இந்த பெயரை நீக்குவது என ஒரு பெரிய முனிவரிடம் ஆலோசனை கேட்டார்கள் ,அதற்கு அவர் உன் வீட்டு வாசல் முன் பெரிய பந்தல் போட்டு ஒரு வார காலத்திற்கு அன்னதானம் வழங்கு என ஆலோசனை கூறினார். அதன் படி தொடர்ந்து அன்னதானம் வழங்கினர் ,அதன் பின்னர் மக்கள் ஒரு வாரம் தொடர்ந்து சோறு போட்டங்களே அந்த வீடு என சொல்ல ஆரம்பித்தனர் ,இதுதான் முழு பூசணியை சோற்றில் மறைத்த கதை .

good night

குட் நைட் என்று எந்த நேரத்தில் சொல்லவேண்டும் என உங்களுக்கு தெரியுமா?  நீங்கள் பிறரிடம் இருந்து விடை  பெரும் பொழுது , சொல்லலாம் ,அதாவது மீண்டும் இன்றய  தினம்  சந்திக்க போவதில்லை என முடிவு செய்த வுடன் சொல்லலாம் .

12 p.m

சாதாரணமாக நாம் டிஜிட்டல் கடிகாரங்களில் A.M , என்றும் P.M, என்றும் பார்த்திருப்போம் ,அதற்கு அர்த்தம் என்ன என பலருக்கும் தெரியாது.A.M , என்றால் ANTE MERIDIEM  என்று பொருள் அதாவது காலை நேரத்தை குறிக்கும் ,காலை நேரம் என்பது நள் இரவு 11 ;59  க்கு மேல் நுண் பகல் 11 ;59  வரை  ஆகும் .    P.M,   என்றால்  POST MERIDIEM என்று பொருள். நுண் பகல் 12 ;௦௦ முதல் இரவு 11 ;59 வரை குறிக்கும் . The 12-hour clock is a time conversion convention in which the 24 hours of the day are divided into two periods called ante meridiem (a.m., Latin: "before mid day" English: "before noon") and post meridiem (p.m., Latin: "after mid day" English: "after noon"). ...

.செய்திகள்

சாதாரணமாக நியூஸ் என்ற வார்த்தை எவ்வாறு வழக்கத்தில் வந்தது என காரணம் தெரியுமா .N -NORTH
                    E - EAST
                    W- WEST
                    S-   SOUTH                                
நான்கு திசை களில் இருந்து செய்திகள் வருவதால் ,இதனை நியூஸ் என்கிறோம் .

Sunday, November 28, 2010

உதவி

வாழ்வில் முழு வெற்றி பெற்ற மனிதன் முதல் முன்று படிகளை கடந்து தான் ஆக வேண்டும் .முதல் படி ஏளனம்    ,கேலி         இரண்டாவது படி கண்டனம்    ,ஆர்பாட்டம்     ,முன்றாவது படி மக்கள் தாங்களாகவே ஏற்றுக் கொள்ளுதல் .இது காந்தி சொன்ன செய்தி .இன்றல்லாம் சிறு உதவி செய்தால் கூட அதை பெரிய அளவில் விளம்பரம் செய்து கொள்வோரையே அதிக அளவில் காண முடிகிறது ,உதாரணமாக ஒரு கோவிலுக்கு ஒருவர் மின் விளக்கை கொடையாக அளிக்கிறார் என்றால் அவ்விளக்கு மறையும் அளவிற்கு அதில் தான் பெயரை எழுதி வைத்து விடுகிறார் .காரணம் தான் கொடை தந்தமை அடுத்தவருக்கு தெரிய வேண்ண்டும் என்ற எண்ணமே ஆகும் .இது போன்ற பண்புடைய மக்களுக்கு இடையே எந்த ஒரு புகழையும் எதிர் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிற அய்யா டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நிகர் அவர் தான் .

சும்மா பொய்

என் இதய வாணில் உலா வரும் பெண் நிலவே !
உன்னை காணாத  நாட்கள் எல்லாம் அம்மா வாசை தான் !                                        ( இல்லை உண்மை)

இலவச மிதிவண்டி

அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி ,பல விதமான உறவுகளிடம் நாம் எதிர் பார்ப்பதும் பெற விரும்புவதும் அன்புதான் .துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.எவ்வளவு துன்பங்கள் பிரச்சனைகள் இருப்பினும் அத்தணையும் மறந்து மகிழ்ந்திருக்கிற ஒரே சக்தி தான் அன்பு .ஏழை எளிய மக்களின் மிது அன்பு செலுத்தவும் ,ஏழை எளிய மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த நினைக்கும் மனிதர் தான் டாக்டர் ரவிச்சந்திரன்.

பெண்ணே

எனது விழிகளே விரல்களாக நீண்டு !
உனது இடுப்பு மடிப்புகளை வருட நினைக்கும் போது !
நீ ஏன் உனது மேனி வீட்டை முந்தானை கதவுகளால்,
 முடி கொள்கிறாய் !
தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து திறக்க மாட்டேனா என்ன !(நம்ம கவிதையை கேட்டவுடன் பய புள்லைக்கு வெட்கத்தை பாரு)

இதயமே இதயமே

ஆண்டவன் படைத்த என்  இதயத்தில் !
அடைக்கலம் புகுந்த பெண்ணே !
ஆசை மனைவியாய் நீ !
அருகில் இருந்தால் போதும் !
அத்தனையும் அமர்க்களம் தான்!
அழகான உன் விழிகள் !
ஆளமாக என் மனைதை பாதித்து விட்டன
தூரத்தில் நீ
துக்கத்தில் நான் .
((சும்மா கவிதை தான் தப்பா நினகிறிங்க போல பார்வையே சரி இல்ல மேடம் நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு வேனும்னா ப்ளாக் ஓட டைட்டில் போட்டோவுல ஒட்கந்திருகின்ற என்னோட மகள் கிட்ட கேளுங்க ப்ளீஸ் வேண்டாம் ,சார் என்னை காப்பாத்துங்க !

Friday, November 26, 2010

hai

oh pennea neethan boo makala