Pages

Sunday, February 26, 2012

அம்மா அவர்களின் 64 வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை



 

இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின்
64 வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை
27   வது வட்ட கழகத்தின் சார்பாக சிறுவர் சிறுமியர்களுக்கான மாபெரும்
விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர் பா.துரைராஜ் அவர்கள் தலைமையில் நகர கழக செயலாளர் திரு.க. பாஸ்கர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் பு .கிருஷ்ண குமார், முன்னிலையில் ,நகர தந்தை திரு. கார்த்திக் தொண்டைமான் மற்றும் நகர் மன்ற துணை தலைவர் திரு

 SAS சேட் என்ற   . அப்துல் ரகுமான் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர் ,சிறுமிகளுக்கு , பரிசுகளை வழங்கினார்கள் .

Wednesday, February 1, 2012

இதை படிக்காதிங்க ப்ளீஸ்

உங்களுக்கு ஏழரை சனி பிடித்துள்ளதா ? அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசனை செய்பவரா நீங்கள் ?   இதோ உங்களுக்காக ஒரு சில ஆலோசனைகள்.
சனி பகவனை பொறுத்தவரை நீதி மான், தன்னுடைய கடமையில் கண்ணும் கருத்துமானவர் ,கடமை தவறாதவர் ,
இருப்பினும் 

ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்

சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே

அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்

நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.

அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்

மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.

அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்

குறைந்ததாக இருக்கும்.

அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்

சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக

இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்

சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.


இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்

கைதூக்கிவிடுவான். பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.
மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி

மேலே அனுப்பி வைத்து விடுவார்.


அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்

அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,

எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.

அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்

சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்

கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!


அஷ்டமச் சனி என்பது , எவர் ஒருவர் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி இருக்கிறாரோ , அதை வைத்துக் கூறுவது. இப்போது கண்ணியில் சனி இருப்பதால் , கும்பத்திற்கு இப்போது அஷ்டமம் நடந்து கொண்டு இருக்கிறது.
பொதுவாக அஷ்டமம் என்பது , ஏழரை ஆண்டு அனுபவிக்கும் தொல்லைகளை அந்த இரண்டரை வருடத்திலே கொடுத்துவிடும்.
இதனால் சனி பகவானின் கொடுமையில் இருந்து நீங்கள் தப்பிக்க , முடிந்தவரை நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொண்டு , இறை வழிபாடு முறைப்படி செய்தலே. இல்லையென்றால் மிக சிரமமாகத்தான் உணர்வீர்கள்...


நீலப்பட்டு வாங்கி சனிபகவானுக்கு சாற்றலாம்.


நீல உடைகள் அணிந்துவந்து சனிபகவானை வழிபடலாம்.


கறுப்பு எள் மற்றும் கருப்பட்டி அல்லது சர்க்கரை கலந்த பண்டங்களை இடித்து சனிபகவானுக்கு படைத்து பிறருக்கு பிரசாதமாக வழங்கலாம்.


சனிபகவான் முன்பாக நல்லெண்ணெய்,நெய்,இலுப்பை எண்ணெய் கலந்து சிட்டி விளக்கில் திரி வைத்து விளக்கேற்றி 9 முறை வலம்வந்து வணங்கலாம்.


கோயிலுக்கு அருகில் உள்ள காக தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபடலாம்.