Pages

Monday, March 28, 2011

பாம்பாட்டி

காட்டில் வாழக்கூடிய மிருகங்களில் அதிக விஷத்தன்மை உள்ளது எது எனில் பாம்பு என்று  தான் சொல்ல வேண்டும்.பாம்புகளில் பல வகைகள் உள்ளன.என்னுடைய வாழ்வில் பாம்பை வார  வாரம்  வெள்ளிகிழமை அன்று பார்க்க வாய்ப்பு கிடைக்கும் .என்னடா லூசு மாதிரி சொல்லுறேன்னு  நினைக்காதிங்க . கோவிலுக்கு போற ஆளு நான் கிடையாது .கடவுளை உள்ளத்தில் வைத்து வணங்குபவன் நான் .அப்புறம் எப்புடிடா  இவன் வார வாரம் பாம்பை பார்பான்னு உங்களுக்கு ஒரு யோசனை வரும் .அதெல்லாம் சும்மாங்க வெள்ளிகிழமை அன்று எங்க ஊரில் சந்தை.
ஒவ்வொரு வெள்ளி அன்றும் பாம்பாட்டி பம்பை வைத்து வித்தை காட்டுவதை பார்த்திருப்போம் .பாம்பாட்டி வித்தை காட்டும் போது ஒரு முட்டையை  நம்ம கண்ணு முன்னாடியே மறைய செய்வான்  .அத நீங்க பார்த்திருப்பிங்க அது எப்புடி சாத்தியம் .அப்போ பாம்பாட்டிக்கு மந்திரம் தெரியுமா,அதெல்லாம் கிடையாது வெறும் தந்திரம் தான் .அந்த தந்திரத்தோட விளக்கம் உங்களுக்கு தெரியுமா ?முட்டையை ஒரு பையில் வைப்பான் .அதற்க்கு பின்னர் தான் முட்டை மறையும் .ஒவ்வொரு ஷோ நடைபெறும் முன்னர் பாம்பாட்டி 
முட்டையின் உள்ளே உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை சிறு ஓட்டை 
அமைத்து straw  மூலம் உறிஞ்சி  விடுவார்கள். மீதம் அந்த முட்டையில் இருப்பது 
வெறும் ஓடு மட்டும் தான் .   துளை இடப்பட்ட பகுதியை நன்கு ஒரிஜினல் முட்டை போல் பேஸ்ட் 
ஐகொண்டு ஒட்டி விடுவார்கள் .மேலும் அந்த ஷோ வில் பங்கு  பெரும் நபர்கள் அவர்களுடைய ஆட்கள்தான் .பையின் உள்ளே மற்றொரு ரகசிய பை இருக்கும் .அதன் உள்ளே முட்டையை வைத்து 
பையை பிடித்து கசக்கும் பொழுது உள்ளே உள்ள முட்டை shape பையின் shape எப்படியோ அதுபோல் மாறும் மேலும் உள்ளே உள்ள ரகசிய பையில் இருப்பதால் வெளியில் தெரியாது .   

Sunday, March 27, 2011

வியாபாரம்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூர் சென்றிருந்தேன், என்னுடன் வந்திருந்த நண்பர் சாலை ஓரத்தில் சட்டை துணி  விற்று கொண்டிருக்கும் வியாபாரிகளிடம் சென்று விலை கேட்டார் ,விலை கேட்ட
 நண்பருக்கு 
கடுமையான அதிர்ச்சி  ஒரு சட்டையின் விலை  ரூபாய்  20  மட்டுமே . நானும்
ஆச்சர்ய பட்டேன் . இருப்பினும் நான் எனக்கு எதுவும் வேண்டாம் என விலக நண்பர் தனக்கு நான்கு சட்டைகளை வாங்கினார் .அந்த வியாபாரம்
நடை பெற்று கொண்டிருக்கும் நேரம் இரவு எட்டு மணி இருக்கும் . வியாபாரம் நடைபெற்ற கடையில் எரிந்து கொண்டிருந்தது காண்ட விளக்கு மட்டுமே ..நண்பர் எடுத்து கொடுத்த சட்டைகளை கடைக்காரர் வேகமாக வாங்கி ,இன்னொரு நபரிடம் இதை பார்சல் செய் என வேகமாக எறிந்தார் .பார்சல் திரும்பி வந்தது ,பார்சல் என்றால் ,பெரிய அளவில் எதுவும் கிடையாது சாதாரண கருப்பு பிளாஸ்டிக் பையில் இறுக்கி முடிச்சு இடப்பட்டிருந்தது . நண்பர் துணி வாங்கிய சந்தோசத்தில் பேருந்தில் புறப்பட ,மறுநாள் காலை நான் மறக்காமல் நண்பர் எழுந்ததும் ,உங்களுடைய புது சட்டையை எடுங்கள் பகலில் பாப்போம் என கூற நண்பரும்  ஆர்வத்துடன் பார்சல் இ பிரிக்க உள்ளே இருந்தது எல்லாம் பழைய 
கிழிந்த சட்டைகள் ,நண்பரின் முகமோ   பேய் அறைந்தது போல் இருந்தது.பெங்களூர் வாசிகளுக்கு  இது போன்ற  கடை பற்றி    நன்கு தெரியும்.

LIC

பல நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அதிகபடியான வட்டி தருகிறோம் உங்கள் பணத்திற்கு நாங்கள் உத்திரவாதம் என விளம்பரம் செய்ய ,அட நம்ம LIC  நிறுவனம் அரசாங்க நிறுவனம் அதுல பணத்தை போட்டால் நிச்சயம் லாபம் கிடைக்கும் என நம்பி ரூபாய் 50000 (ஐம்பது ஆயிரம்) த்தை MONEY  பிளஸ் என்ற திட்டத்தில் முதலிடு செய்தோம் ,மூன்று ஆண்டு 
முடிந்த பின்னர்  51,900 ஆயிரம்  ரூபாய் தான் முதிர்வு  தொகையாக இருந்தது அதாவது மூன்று ஆண்டுகளுக்கு எங்களுக்கு கிடைத்த லாபம் வெறும்  1900 மட்டுமே ஏனெனில் மார்க்கெட் சரிந்து விட்டது என சொல்லுகிறார்கள் .அய்யா என்னை lic  இல் அறிமுகபடுத்திய lic  agent  க்கு கிடைத்த லாபம் கூட எங்களுக்கு கிடைக்கவில்லையே ,  மக்களே விழிப்புடன் இருங்கள் .

Thursday, March 24, 2011

ADMK தேர்தல் அறிக்கை




AIADMK Election manifesto 2011,அதிமுக தேர்தல் அறிக்கை 2011from admk amma pasarai by tamilan








அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை முழு விவரம்..



மாணவர்களுக்கு லேப்டாப் : பிளஸ்- 1, பிளஸ் - 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.



சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும்.



அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும்.



10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை , பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.



கேபிள் டி.வி., அரசுடைமையாக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.







ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்,



அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன மூன்றும் இலவசமாக வழங்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். அனைவருக்கும் 20 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கப்படும்.



மும்முனை இணைப்பு மின்சாரம் : கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கெ?ள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தெ?ழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும்.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நபர்களுக்கு 4 ஆடுகளும், முக்கிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 60 ஆயிரம் மாடுகள் வரை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.



அரசு ஊழியர் நலனுக்கு பாதுகாப்பு : அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க மீனவர்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்றார். மீன்பிடிக்கு தடை விதிக்கப்படும் 45 நாட்களுக்கு மீனவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படும். பருவகாலத்தில் மீன் பிடிக்கு இடையூறு ஏற்படும் போது ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும்.



தமிழகத்தை தலை நிமிரச் செய்வது லட்சியம் : தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும் கை ஏந்தும் நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக்காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம்,நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து - இழந்த பெருமையை மீட்டெடுத்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம்.







விலைவாசியை குறைக்க சிறப்புத் திட்டம் : விலைவாசி உயர்வினால் இன்றைக்கு அனைத்துத் தரப்பு மக்களும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகளின் செயலற்ற தன்மையால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.விவசாய உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பயனில்லாமல், இடையில் உள்ள இடைத்தரகர்களும், பதுக்கல்காரர்களும், மொத்த விற்பனையாளர்கள், ஆன்லைன் வரன்முறையாளர்களினால் திட்டமிட்டு ஏற்றப்படும் விலைவாசியின் ஏற்றம் தடுக்கப்பட்டு, அதைத் தடுக்க அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.







விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செடீநுயப்படும். கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.



இலவசமாக நவீன பசுமை வீடுகள் : வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாடீநு செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாடீநு மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் கடனாளிகளின் பிரச்சனைகள் களையப்படும்.



இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம் : இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயம், குடும்பம், தொழில்களுக்கான மின்சார விநியோகம் தனியாக பிரிக்கப்பட்டு, அதை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விநியோக முறையில் மாற்றம் செய்து சீரமைப்போம்.



கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார்துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும். மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

Wednesday, March 16, 2011

கடவுள்


உலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி.

இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.

அந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி. அதில் உள்ள பல முள்களுக்கு இடையில் ஒரு அழகான ரோஜா பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜா பூ செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.
ஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜா பூ செடியின் மீது, “ஆஹா… கடவுள் கருணையே கருணை! இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா? நீர் விடுவார்களா?”. இந்த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.
சற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறது. நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.



“உண்மை அறிதல், தன்னை அறிதல்”

வெற்றி படிகள்




நூற்றாண்டுகள், நூற்றாண்டுகளாக "மைதாசின் மாயக்கை" படைத்த, வெல்லவே முடியாத, எண்ணற்ற தடைகளைத் தகர்த்தெறிந்து இமயத்தை வென்ற எண்ணிலா மனிதர்கள் சுட்டி க்காட்டும் வரலாறை நாம் மறுக்க இயலுமா, மறைக்கத்தான் முடியும? ஒரு சிலருக்கு, அவர்களின் மகத்தான வெற்றி குருட்டு அதிர்ஷ்டத்தின் பயனாகத் தெரியலாம். மற்றும் சிலருக்கு அது அவர்களுடைய கடும் உழைப்பின் பரிசாகவும் தென்படலாம். ஆனாலோ, ஆண்ட்ரூ கார்னகி,, ஹென்ரி ஃபோர்டு ஆகியோரின் வியப்பூட்டும் வெற்றிகளின் பின்னே ஒளிந்துள்ள உண்மை மிகவும் சுவையானது என்பதை மறுக்கவே முடியாது!

ஒவ்வொரு மனிதனும் அடைய அவாவுறும்ஒரு உயர்ந்த நிலைதான் வெற்றி என்பது. கணக்கற்ற பலர்போல, சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வழிகளை நீங்களே திறக்க முடியும். எப்படி என்று பார்க்கலாமா?





வெற்றிப்படி-1: அவா அல்லது ஆசை.

எந்த ஒரு இலக்கையும் அடையும் நடவடிக்கைகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், நாம் நமது இலக்கை அடைய எண்ணும் ஆசைக்கு நமது மனம் எவ்வாறு பதில் குரல் கொடுக்கிறது என்பதுதான். விறுப்பும், வெறுப்பும், வேண்டியும், வேண்டாமலும், தொட்டும், தொடாமலும் ஆன மனநிலையும் எண்ணமும் தோன்றினாலோ, வெளிப்பட்டாலோ, உள்ளத்தின் ஊக்கத்தின் அளவு குறைந்து, தோல்வியோ, அல்லது, பாதி வெற்றியோதான் எ ய்த முடியும்.

ஒரு இலக்கை அடையவேண்டும் என்றால், நமது திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி, வெற்றியெனும் இலக்கை எட்டும்வரை முழுமூச்சான எண்ணமும், உத்வேகமும், திட சித்தமும் கொள்ளவேண்டும். ஆசை அல்லது அவாதான் இந்தத்திட மனநிலையை உருவாக்கும்.

இந்த ஆசையெனும் விசைதான் மனிதகுலத்தை ஒவ்வொரு நிமிடமும் புதிய அறிவைப் பெறவேண்டுமென்ற ஆற்றொணாத் தாகத்திற்கு ஆளாக்கி, அறிவியலின் எல்லா எல்லைகளையும் தாண்டி, நம்பவே முடியாத, என்றுமே எதிர்பார்க்கவே முடியாத அளவு உயர்ந்த இலக்கை அடையவைத்துள்ளது என்றால் மிகையாகுமோ?









இந்த அவாவெனும் விசையை உருவாக்கி, வளர்ப்பது ஒன்றும் இமயமலையில் ஏறுவதுபோல் கடுமையானதும் அல்ல, இயலாததும் அல்ல. நாம் செய்யவேண்டியது எல்லாம், நமக்கு வேண்டியதை நோக்கி, நம் இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருப்பதுதான், இடைவிடாமலும், எந்த இடையூறுகளுக்கிடையிலம். எளிதாகச் சொன்னால், இவ்வளவுதான்! நிற்காதே! நிற்காதே! ஓடு! ஓடு! ஓடிக்கொண்டேயிரு, நிற்கவே நிற்காத குதிரையைப்போ ல்! குறைந்தபட்சம் நடந்துகொண்டேயாவது இரு. ஓய்ந்துபோய் உட்கார்ந்துவிடாதே! "நீ விட்டுவிட்டு நிற்கும்வரை, நீ தோல்வி அடைவதில்லை" என்ற மகத்தான பொன்மொழியை மறக்க முடியுமா! "நாம் எதையெல்லாம் மிக்க ஆர்வத்துடனும், இடைவிடாமலும் அடைய ஆசைப்படுகிறோமோ, அவையெல்லாவற்றையும் அடைவோம், எய்துவோம்", என்ற நெப்போலியனின் ொன்மொழியை மறக்கத்தான் முடியுமா!





வெற்றிப்படி - 2: இலக்கு

கடும் முயற்சிக்குப் பின்பும்கூட, பெரும்பாலோர் திருப்திகரமான முடிவுகளைப் பெற இயலாதுபோவதன் முதற்காரணம் என்னவென்றால், அவர்கள், தாங்கள் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதையே தெரிந்து கொள்வதில்லை. உங்களுடைய இலட்சியம் வெள்ளோட்டமாகவோ, அரைகுறையாகவோ இருக்கக் கூடாது. உங்களுடைய இலக்கை அடைவதற்கு முன்பு, அந்த இலக்கை அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எந்தவிதத்தில், எவ்வாறெல்லாம் மாறுபடும், வேறுபடும் என்பதை முன்கூட்டியே உணரவேண்டும், யோசிக்க வேண்டும். நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் துல்லியமாகத் திட்டவட்டமாக, உள்ளங்கை நெல்லிக்கனிபோல, சந்தேகமே இல்லாமல் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடைகள் கட்டாயம் வேண்டும்: இலக்கை அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எந்தமுறையில் இப்போது இருப்பதிலிருந்து வேறுபடும்? முன்னேறுமா, மாறுபடுமா? இலக்கை அடைந்தபின் நாம் எவ்வாறு உணர்வோம்? நமது நோக்கு எவ்வாறு மாறுபடும்? எந்தவிதமானச் சந்தர்ப்பங்களில், நிலைகளில் நாம் நிற்போம், ஆட்படுவோம்? நீங்கள் இலக்கை எட்டியபின், உங்களைச் சுற்றியுள்ள மக்கள் எவ்வாறு உங்களால் பாதிக்கப் படுவர்? அவர் எவ்வாறு எதிர்ச்செயல்படுவர்? நீங்கள் இலக்கை எய்துவது என்றால் என்ன, என்ற தெளிவான, முடிவான, சித்திரம் உங்கள் மனத்திரையில் விரிக்கப்பட வேண்டும்.





வெற்றிப்படி - 3: நம்பிக்கை

நம்பிக்கையினால்தான் ஆசை பிறக்கிறது. யாரேனும் மறுக்க முடியுமா?

ஆசையும், நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்றால் மிகையாகாதன்றோ! இந்த நம்பிக்கைதான், ஊக்கம் எனும் நெருப்பை அணையாமல் எரியவிட்டுக் காத்து ஒளிர வைத்து நம்மை, நமது இலக்கை நெருங்கச் செய்கிறது. நம்பிக்கை என்பது மலைகளையெல்லாம் அசைக்கவும், இளக்கவும் உடைக்கவும் செய்யும். வெற்றியைக் கொன்று குவிக்கும் எதிரிகளான, தேவையில்லாத பயம், நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளுதல், அநாவசியமான கவலை, துக்கம், சுயமரியாதைக் குறைவு ஆகிய வற்றையெல்லாம் உருக்கி, இளக்கி, அசைத்துக் கரைக்கவல்லது நம்பிக்கைதான்இலக்கை நமது மனதில் திடமாக அமைத்தபின்னர், இந்த அவா விசையானது கடக்கவே முடியாதவைபோல் தோற்றம் கொடுக்கும் தடைகளை நோக்கி நம்மை விசிறி எறியும். நாம் நமக்கு விருப்பமான வெற்றி முடிவை அடைவோம் என்ற அசைக்கவே முடியாத நம்பிக்கை நம்மை வெற்றியை நோக்கியே உந்தித் தள்ளும். இந்தத் திட நிலையைப் பிரதிபலிக்க மனத்தை இயக்கிவிட்டால், ஆச்சரியகரமான மாற்றங்களும், வெற்றியின் அடையாள ங்களும் தோன்ற ஆரம்பிக்கும். நம்பிக்கையின் அபரிமிதமான சக்தியையும், அதன் ஆச்சரியகரமான வெற்றிகளையும குறித்து பலரும் சான்றளித்தாலும், இன்னும் பலபேர்க்கு, பரிபூரணமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தபோதிலும், மலையளவு எதிர்ப்புகள் வருங்காலல் லாபகரமான முடிவுகள் வருமா, கிட்டுமா, என்ற சந்தேகம்தான்! வரும் தடைகள் உளவியலான தாகவோ, உடல்நிலையை ஒட்டியதாகவோ இருந்தாலும்,





"எதுவும் சரியான வழியில் செல்வதில்லை, எல்லாமே தவறாகிவிட்டன" என்ற ஒரே ஒரு தவறான எண்ணக்கீற்று மாத்திரம், இமயத்தையே வெல்லும் மனவுறுதி கொண்டவரையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடும் ஒருநொடியிலேயே! ஆனால் இதே இந்தச் சந்தர்ப்பங்களிலும், நிலைகளிலும்தான் நம்பிக்கையும், விசுவாசமும் மகத்தான வெற்றி விளைவுகளைக் கொடுக்கும் என்பதை அனுபவித்துத்தான் உணரவேண்டும் என்பது உண்மை. உங்கள் மேல் நம்பிக்கை, உங்கள் செயலில் நம்பிக்கை, செயலை நிச்சயமாகச் செய்து முடிப்போம் என்ற விசுவாசமும், நம்பிக்கையுமே வாழ்வின் வெற்றுக்கு உறுதுணை!





ஒரு சிலர் உண்டு - "ஆமாம்! சொல்லுவது எளிது, செய்வது கடினம்" என்று தனக்குத்தானே குறைபடடுக் கொண்டு, உளவலிமையிலா திருப்பவர்கள். இந்த மனப்போக்குதான் எல்லாத் துன்பங்களையும் சிரஞ்சீவியாக வாழவைத்து உங்களையே அழிக்கும் முதல் எதிரியாகும். நம்பிக்கை வேண்டும் என்பதில் விசுவாசமாக இருங்கள். நீங்கள் தாங்களாகவே நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

ஒரு காகிதத்தில் உங்களது இலக்குகளையெல்லாம் அழகாக எழுதி வைத்துக்கொண்டு, ஒவ்வொரு காலையும் எழுந்தவுடனும், இரவு உறங்கப்போகு முன்னரும் "இதை நான் செய்து முடிக்க வேண்டும்" என்று திருப்பித் திருப்பிச் சொல்லிப் படியுங்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள். "காலப் போக்கில், விரைவில் நாம் வெற்றி பெறுவோம்" என்று உங்களுக்கே, நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அன்றாட மற்ற வேலைகளில் ஈடுபடும்போதுகூட, உங்கள் இலக்குகளை அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள், "வெற்றி பெறுவேன்" என்று நினையுங்கள். இப்படிச் சொல்வது உங்கள் மனதை நீங்களே எமாற்றுவதாக ஆரம்பத்தில் எண்ணலாம். அனால், போகப்போக ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதைக் காண்பீர்கள்.





வெற்றிப்படி - 4: திட்டம்.

நம்பிக்கை எனும் கரும்பாறையானக கட்டமைப்பின் மீது இலக்கை நிர்ணயித்துவிட்டீர்கள். ஒவ்வொரு செயலுக்கும், அதன் வெற்றிக்கும், இடம், பொருள், ஏவல் என்ற மூன்றும் இன்றியமையாதவை. செய்யும் இடம் முதல் தேவை. செய்வதற்குச் சிலரது உதவி தேவைப்பட்டால், அவர் யார் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இலக்கு, எண்ணம், செயல் ஆகியவற்றின் துல்லியமான வரைபடம் வரையுங்கள். அதன்படி செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்!





ஆனால் ஒன்று! உங்களுடைய திட்டம் சரிவர வேலை செய்யுமா, உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்குமா, என்பதை ஆராயவேண்டும். வரைந்த திட்டம் கற்பாறையாக இல்லாமல், மாறுதல்களை ஏற்றுக் கொள்பவையாகவும் இருக்கவேண்டும். ஆனால் ஒரு எச்சரிக்கை! தீர ஆலோசித்துத் தீட்டிய திட்டத்தில், பின்னர் மாறுதல்களை உட்படுத்துவதற்கு முன்பு, அந்த மாறுதல்கள் தேவைதானா, காலப்போக்கில் நீடித்து நிற்குமா, என்று தீர யோசனை செய்தபின்தான் அந்த மாறுதல்களைத் திட்டத்தில் புகுத்தவேண்டும்.

எதோ ஒன்று செய்து, ஏதோ ஒரு இலக்கில் முடிவடைவதையும் சிலநேரம் தவிர்க்க முடியாது. எதிர்பார்த்த வெற்றி விரைவிலேயே கிடைத்துவிடலாம், தாமதமும் ஆகலாம். "சங்கிலித் தொடர் நிகழ்ச்சி" அல்லது "வண்ணத்துப் பூச்சி நிகழ்வு" என்பது இதற்குப் பெயர். இங்கும், அங்குமாக திட்டத்தில் நீங்கள் செய்த மாறுதல்கள், ஆச்சரியகரமான மேல்விளைவுகளையும் ஏற்படுத்தி, அதிசயப்படும் அளவு வெற்றியைக் கொடுப்பதும் உண்டு. தோல்வியையும் சிலநேரம் தழுவவேண்டியச் சங்கடமான நிலைமையும் சிலசமயம் ஏற்படலாம். எதற்கும் துணிந்து, தயாராக இருக்கவேண்டும்.





வெற்றிப்படி - 5: உருவகப்படுத்துதல்.

உள்ளத்தில் எழும் எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது என்பதுதான் இது. "மனக்கோட்டை" என்றுகூடச் சொல்லலாம். நாம் இலக்கை அடைந்துவிட்டதாக எண்ணி மனதில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உள்ள எழுச்சிக்கு மிகவும் ஏதுவானது. இது ஒரு மிகச்சிறந்த பயனைக் கொடுக்கவல்லது. இது உங்களது அவாவிற்கும், விடாமுயற்சிக்கும் மணிமகுடம் சூட்டவல்லது, எனெனில், இதன்மூலம் நீங்கள் உங்கள் இலக்கை அடைந்துவிட்டதாகவே உள்ளம் எண்ணி , மகிழ்ந்து அமைதியுறுகிறது.





மனத்தளவில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுவிட்டோம் என்னும் மகிழ்ச்சி, மேலும் என்னவெல்லாம் நன்மைகளைக் கொடுக்கிறது? முழு மன நிம்மதி, ஒரு நோக்கம் முடிவடைந்துவிட்டதென்று. அக்கம்பக்கத்தில் உள்ள மற்றவர்களும் நம்மைப் பாராட்டுவதை நாம் உளத்தளவில், மானசீகமாக உணர்கிறோம். இதுவே நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்து, நம் அவா-விசையை உந்தித்தள்ளி, நம் நம்பிக்கையைப் பலப்படுத்தி நம்மை நம் இலக்கை நோக்கி முன்னேற வைக்கிறது. அதிசயம், ஆனால் உண்மை!





வெற்றிப்படி - 6: ஆழ்மன சக்தி

ஆழ்மனதின் அடிவாரத்திலிருந்துதான் தோல்வி அல்லது வெற்றிச் செடியின் விதை முளைக்கிறது. ஒவ்வொருவரின் சுயபிம்பம ஆழ்மனதிலிருந்துதான் வெளிப்படுகிறது. "இவன் இப்படிப் பட்டவன்தான், ஐயா, இவன் மாறவே மாட்டான்" என்கிறார்களே, அதுதான் இது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த சுய பிம்பம் எளிதாக மாற்றப்படக் கூடியது. இந்தக் கட்டுரையைச் சரியாகவும், முறையாகவும் படித்துக் கூறப்பட்டக் கருத்துகளைச் செயல்படுத்தினால் எந்த ஒரு சுபாவத்தையும், உள்ள நிலையையும் எளிதில் மாற்றிவிடலாம். திறந்த மனப்பான்மையையும் உருவகப் படுத்தும் வழிமுறையையும் மேற்கொண்டு இந்தப் பயன்பெறலாம்.

ஆண்ட்ரூ கார்னகி தன் தொழிலைத் துவங்கும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொழிலிலோ, துறையிலோ ஆழ்ந்த திறமையில்லாதவராகவும், சாதாரணமான ஒரு மனிதராகவும்தான் இருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

தன் கடும் உழைப்பாலும், மேற்குறிப்பிட்ட வழிமுறைகளாலும், பலனடைந்து, பல மில்லியன்களை ஈட்டி எல்லோருக்கும் அவர் கொடுத்தார் என்பது இன்றைய அழிக்கவே முடியாத வரலாறு! கார்னகியின் தத்துவம் இன்றும் அமரத்துவம் வாய்ந்து சிரஞ்சீவியாக வாழ்வதை ஆயிரக்கணக்கில் கிடைக்கும் கார்னகியின் வெற்றிப் புத்தகக் குவியல்கள் நிலைநாட்டுகின்றன!



மேற்குறிப்பிட்ட ஆறு படிகளை வாழ்வில் நுட்பமாகப் பயன்படுத்தினால் இயலாத செயல் என்பது எதுவுமே இருக்காது

Saturday, March 5, 2011

மர்மம் 3

அதிகாலை  எழுந்து மூர்த்தி மற்றும் அவனது தந்தை மற்றும் அவனது அண்ணன் எல்லோரும் குளித்து காலை  உணவைமுடித்து ரெடியாக 
இருந்தார்கள் .டாட்டா சுமோ ராஜன் விட்டின் முன்னே மணி 7 1 /2

மணிக்கு நின்றது .மூர்த்தி கல்லூரியில் இளங்கலை பயின்றவன் .காலத்தின் சூழ்நிலை வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்ட வேண்டிய நிலை இவ்வாறாக மனதில் நினைத்தபடி சுமோ வின் உள்ளே ஏறி அமர்ந்தான் ராஜன், வண்டியில் ஏற்கனவே பீட்டர் அமர்ந்திருந்தான் .என்ன பீட்டர் வண்டி எங்க போகணும் டீஸல் போட்டியா இல்லையா .


பீட்டர் பதில் சொல்லும் முன்னே டிரைவர் முந்தி கொண்டு  டீஸல் ஏற்கனவே போட்டாச்சு ,இப்ப எங்க போகணும் சொல்லுங்க என்றான் . பாவம் அந்த டிரைவர் ரொம்ப அவசரமாகவும் ஆர்வமாகவும் இருக்கான் ,அவனுக்கு தெரியாது இந்த சவாரி அவன் வாழ்க்கையை ரொம்ப பாதிக்கும் என்று .


பாவம் வண்டி சவாரி போனதும் சாயந்தரம் வந்திடும் என நம்பி அடுத்த சவாரி க்கு பேசிகிட்டு இருந்தார் அந்த வண்டியோட உரிமையாளர் .


வண்டி புறப்படும் போதே வண்டியின் குறுக்கே பன்றி வேக மாக ஓடியது 

வண்டி மூர்த்தி வீட்டை அடைந்ததும் ,வண்டியில் மூர்த்தி அப்பா ,அண்ணன் மூர்த்தி யோட தங்கச்சி வீட்டுக்காரர் பக்கத்துக்கு வீட்டுகாரர் எல்லோரும் வண்டியில் 
அமர வண்டி travellers பங்களா முன் செல்லும் போது எதிரில் மூர்த்தியை 
 இன்று விசாரணைக்கு 
வர சொன்ன  போலீஸ் காரர் ஒருத்தருடன் மேலும் இரண்டுபேர் நிற்க வண்டிய நிப்பாட்டு ,என மூர்த்தி சொல்ல வண்டி ஓரங்கட்டப்பட்டது .
மூர்த்தி வண்டிய விட்டு இரங்கி காஞ்சிபுரம் போலீஸ் காரரை அழைக்க மூர்த்தியை பார்த்ததும் ,அந்த காவலர் அவருடன் இருக்கும் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தாண்டவனிடம் ஏதோ காதில் சொல்ல .சார் நாம யாரை அர்ரெஸ்ட் பண்ண வந்தோமோ அந்த 
குற்றவாளி  இவன்தான் என்று முனுமுனுக்க ,மூர்த்தி அருகில் வந்த இன்ஸ்பெக்டர் .தம்பி என்ன வண்டியெல்லாம் எடுத்துகிட்டு எங்க போறிங்க  என கேட்க .
தம்பி சார் தான் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ,அப்புறம் நான்தான் SI
தாண்டவன் .சார் இன்னைக்கு விசாரணைக்கு வர சொன்னங்க அதான்
வண்டி எடுத்துக்கிட்டு புறப்படுகிறோம் .தம்பி வண்டியில் தேவை இல்லாத ஆட்களை இறகிடுங்க .அய்யா எங்க வீட்டுக்கு வண்டிய விடுறோம் .எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வீட்டில்தான் அந்த பொண்ணு ஒரு நாள் தங்கி இருந்தது தயவு செய்து அங்க வந்து விசாரணை செய்யவும்


கடவுளே என்ன  நடக்கப்போகுது
 தொடரும்

Friday, March 4, 2011

மர்மம் 2

மூர்த்திபோலீஸ் ஸ்டேஷன் இல் இருந்து புறப்பட்ட தனக்கு  வேண்டியவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி புலம்பினான் .காவலர்கள் சொன்ன தேதியில் தான் விசாரணைக்கு செல்ல lawer  ஐ சந்தித்தான்  .ஒன்னும் கவலை படவேண்டாம் தம்பி நான் பாத்துகிறேன் ,குறிப்பிட்ட தேதியில் அந்த ஊர் sp யை பாப்போம் .நீங்க அதற்க்கு வேண்டிய ஏற்பாடை செய் புறபடு . ,கொலை செய்ற கொலைகராங்கலையே நான் காப்பத்துவேன் ஒன்னும் பயப்பட வேண்டாம் புறபடு. 



நல்ல பக்க பலத்தோடு குறிப்பிட்ட ஊர் நோக்கி குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியை சந்திக்க சென்ற அனைவருக்கும் ஏமாற்றம் தான்
மிஞ்சியது ,காரணம் அன்று அந்த அதிகாரி சென்னை ஹை கோர்ட் சென்றுள்ளார். 


என்னடா இன்னும் 7 1 /௨ ஆரம்பம் ஆகலைன்னு படிக்கிற வாசகர்கள் கேட்கலாம்
 




இரண்டுநாள் கழித்து குறிப்பிட்ட அதிகாரிய சந்திக்க முடிவெடுத்தாங்க.அன்றைக்கு இரவு மணி எட்டு இருக்கும் நண்பர்கள் எல்லாம் வரகூடிய இடத்தில் மூர்த்தி காத்திருந்தான் .


ஆனா அவனோட மனசு ஏனோ திக் திக் என்று அடித்தது .ராஜனும் ,பீட்டர்  ரும் வழக்கமா வரவேண்டிய அந்த புதிதாய் கட்டி கொண்டு இருக்கும் கட்டிடம் முன்னால் குமிக்கப்பட்டிருக்கும் மணலில் படுத்திருந்த மூர்த்தி யிடம் ,டே என்னடா ஆள் ஒரு மாதிரியா படுத்திருக்க .
ஒன்னும் இல்லை நண்பா எங்க அம்மா படிக்காதவங்க அது போன வருஷம் செஞ்ச ஒரு முட்டாள் தனத்தாள் என்னைய போலீஸ் விசாரணைக்கு வர சொல்லுது .

நண்பா பீட்டர் எனக்கு ஒரு உதவி செய்வியா, சொல்லு மூர்த்தி என்ன செய்யணும் உண்மைய சொல்லு என்ன உதவி வேண்டுமானாலும்  செய்யுறேன்  .

நாளைக்கு காலைல காஞ்சிபுரம் போய் sp  யை பார்த்து விசாரணையை முடிக்கணும் எதாவது வண்டி ஏற்பாடு செய் .

மூர்தியை பார்த்து ராஜன் கேட்டான் டே அப்பா என்ன விசாரணை ஏன் உன்னோட கண்ணு கலங்குது நீ எதுவும் தப்பு செய்யலை இல்ல .
இல்லைடா எங்க அம்மா பசின்னு வந்த ஒரு பொண்ணுக்கு சாப்பாடு போட்ட ஒரே குற்றத்துக்காக  அந்த பொன்னை நான் 
கடத்தி வித்துட்டதா போலீஸ் மிரட்டுறாங்க .என சொல்லி ஓவென அழுதான் 
ஒன்னும் பயப்படாதே நாங்களும் உன்னோட நாளை காலை விசாரணைக்கு 
வரோம் எனக்கு வேண்டியவர் டாட்டா சுமோ வாடகைக்கு விடுறார் .நாளைக்கு 
எல்லோரும் காஞ்சிபுரம் நோக்கி போவோம் என்றான் பீட்டர்

விடிய போற பொழுது நல்ல பொழுதா இருக்காது   


விடாது கருப்பு

கல்வி

  TODAY IS OURS ,TOMORROW IS OTHERS
மாணவர்களை  பொறுத்த வரை BELOW ,,AVERAGE  ,BRIGHT அப்புடின்னு மூன்று வகையா பிரிக்கலாம்  


 BELOW  ;   இந்த வகையான மாணவர்கள் இன்று படிக்க  வேண்டிய      பாடத்தை படிக்க மாட்டார்கள் ,நேற்றைய பாடத்தை கூட படிக்காம ஆசிரியர் கிட்ட 
அடி வாங்கி உதை வாங்கித்தான்    படிப்பாங்க ,இவர்களை  பொறுத்தவரை
யாரவது இவர்களை தூண்டி   விட வேண்டும் இல்லன்னா தன்நிலை அறியாமல் இருப்பார்கள்  

AVERAGE ; இவர்களை பொறுத்தவரை இன்று படிக்க வேண்டிய பாடத்தை மட்டும் தான் படிப்பாங்க ,இவர்கள் யாருடனும் போட்டி போட நினைக்க மாட்டாங்க


BRIGHT : இவர்களை பொறுத்தவரை இன்று படிக்க வேண்டிய பாடத்தை நேற்றே படித்து முடித்திருப்பார்கள் ,நாளைய பாடத்தையும்  சேர்த்து இன்றைக்கு படிப்பாங்க ,இவர்களை யாரும் தூண்ட வேண்டிய அவசியம் கிடையாது.


 

Thursday, March 3, 2011

வாழ்க்கை உங்க கையில

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மாணவர்களுக்கு நிச்சயம் தீங்கு விளைவிக்க கூடிய ஒன்றாகத்தான் இருக்கும் ஏனெனில் பரீட்சை 
நடைபெற கூடிய நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல்  பறக்கும் . மாணவர்கள் 
படிக்க முடியுமா இல்லை ,தேர்தல் திருவிழாவை அனுபவிக்க முடியுமா ?
எப்புடியோ போங்கப்பா ,உங்க வாழ்க்கை  உங்க கையில   இந்த டயலாக் மாணவ செல்வங்களுக்கு .

மர்மம்

இதயம் பலகீனம் உள்ளவர்கள்  இந்த கதையை படிக்க வேண்டாம் ,அதே போல் கர்ப்பிணிகள் இந்த தொடரை படிக்க வேண்டாம். இது யாரைப்பற்றியும் குறிப்பிடும் தொடர் இல்லை . மேலும் இது முழுக்க முழுக்க  கற்பனையே .(உண்மையா ?)

காலை நேரம் கூவும்  சேவலின் சத்தம் மூர்த்தியின் காதுகளை கிழிக்க மெதுவாக படுக்கையை விட்டு எழுந்து தன் முன்னே உள்ள சாமி படத்தில்  விழித்தான் . பாவம் இன்றைய பொழுது அவனுக்கு நல்ல பொழுதாக இருக்காது என ,அவனுக்கு தெரியாது ,அவனுடைய வாழ்க்கையில் துயரம்   அவனை சந்திக்க போகிறது என தெரியாமல் வழக்கம் போல் தன்னுடைய ஆட்டோவை துடைத்து காலைகடன்களை முடித்து
 சவாரிக்கு தயார் ஆனான் . வண்டியை ஸ்டார்ட் செய்து இறைவனை வேண்டி முதல் கேயரை போட்டு வண்டியை நகர்த்தினான் ,அவனுக்காகவே  காத்திருந்தது போல்கருப்பு  நிற பூனை அவனது ஆட்டோ வின் குறுக்கே சென்றது. 

         ஆட்டோ ஆட்டோ stand ல்  போய்நின்றது .மூர்த்தி  காகவே  காத்திருந்தது போல் உயரமான இரண்டு பேர் ,தம்பி  காவல் நிலையம் வரை சவாரி போகலாமா என கேட்க. உக்காருங்க உள்ளே என கூறி வண்டி காவல்நிலையம் நோக்கி சென்றது. காவல் நிலையத்தில் இறங்கிய இரண்டு பெரும் மூர்த்தி ன் கைகளை இருக பற்றி டே  உள்ள வாடா என இழுக்க மூர்த்தி தடுமாறிபோனான். காவல் நிலையம் உள்ளே சென்றதும் சவாரி வந்த இருவரும் தங்களுடைய ID card ஐ உள்ளே இருந்த இன்ஸ்பெக்டர் வசம் காட்ட அவர்களும் காவல் துறை சேர்ந்தவர்கள் தான் என முடிவு  செய்தான் மூர்த்தி,ஆனால் தன்னை ஏன் அழைத்து வந்தார்கள் என குழம்பி நின்றான்.பேப்பர் பேனாவோடு வந்த இன்ஸ்பெக்டர் டே உண்மையை சொல்லு ஒழுங்கா, பொண்ண கடத்தி எங்க வித்த  ,உண்மையை சொல்லு பொண்ணு உயிரோட இருக்கா  இல்லை கொன்னுட்டியா .

        மூர்த்தி இன்ஸ்பெக்டர் ஐ நோக்கி சார் என்ன கேட்குரிங்கன்னு எனக்கு ஒன்னும் புரியலை .பளார்னு ஒரு
அரை அவன் முகத்தில் விழுந்தது ,பொறி கலங்கியது   போல் இருந்தது மூர்த்திக்கு .

டே உன்னை போல் எத்தனை பேரை பாத்திருப்பேன் டே போன வருஷம் உன்னோட
 வீட்டுக்கு வந்த லலிதான்கிற  பொண்ணு அவளோட வீடு போய் சேரலை உண்மைய சொல்லு பொண்ணு எங்கடா மீண்டும் ஒரு அரை அவன் முகத்தில் விழுந்தது .

           சார் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது நீங்க சொன்ன மாதிரி ஒரு பொண்ணு போன வருடம் ஒரு நாள் மதிய சாப்பாடு சாப்பிட வீட்டுக்கு  போன போது ,எங்க வீட்டுல ஒரு பொண்ணு சாப்பிட்டுகிட்டு இருந்துச்சு ,நான் அம்மாகிட்ட ,ஏம்மா இது யாருன்னு கேட்டப்ப பாவம் இந்த பொண்ணு வீட்டுல ரொம்ப கொடுமை படுத்துறாங்களாம் அதாவது இந்த பொண்ணுக்கு அம்மா இல்லையாம்,வீட்டு  வேலை பாக்குறேன் எங்கையாவது சேர்த்து விடுங்கன்னு சொன்னுச்சு யாரும்மா கூட்டிகிட்டு  வந்தாங்கன்னு அம்மா கிட்ட கேட்டேன் அம்மா சொன்னங்க வாசல்கிட்ட நின்னு இந்த பொண்ணு அழுதுகிட்டு நின்னுச்சு அப்போ உங்க அண்ணன் தான் உள்ள கூட்டிகிட்டு வந்து சாப்பாடு கொடுக்க சொன்னான் சாப்பிட்டதும்  பக்கத்து வீட்டுக்கு, வீட்டு  வேலைக்கு  ஆள் . வேணுமுன்னு சொன்னங்க அங்க கொண்டு  போய் விட்டுருவேன்  நீ சாப்பிட்டு கிளம்புடா  அப்புடின்னு அம்மா சொன்னாங்க .


போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு பேர் தனியாக சென்று ஏதோ பேச     

டே இங்க வா என மூர்த்தி யை  அழைத்து நான் சொல்லுற மாதிரி எழுது ,சார் சொல்லுங்க பத்து நாட்களுக்குள் லலிதா என்ற பெண்ணை கொண்டு வந்து ஸ்டேஷன் யில் ஒப்படைக்கிறேன் என எழுதி கொடு 

அய்யா அந்த பொண்ணு எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது
அப்புடி இல்லைன்ன யோவ் ஏட்டு

இவன் ஆட்டோவை சீஸ் பண்ணி உள்ள வையா 

மூர்த்தி அரண்டுபோனான் 

சார் நீங்க சொல்லுறபடி எழுதி தரேன் 

அதே போல அடுத்த வாரம் விசாரணைக்கு எங்க ஊர்  sp calculator கனகாம்பரம்
அய்யாவ ஆபீஸ்ல வந்து சந்திக்கணும் .

மூர்த்தி மனது படபடத்தது ,ஸ்டேஷன் ஐ விட்டு மூர்த்தி புறபட்டான் ,அவனின் மனது காலையில் அவன் ஆட்டோவை   

கிராஸ் செய்த பூனை தான் அவன் கண்முன்னே ஓடியது