Pages

Sunday, October 23, 2011

நீங்களும் பணக்காரர் ஆகலாம் தீபாவளி அன்று !

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.




தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

தீபாவளி அன்று புதிய அழுக்கு அடையாத ரூபாய் நோட்டுக்களை  அதாவது புதிய ரூபாய் நோட்டுக்களை  ஒரு வெள்ளை துணியில் மடிக்காமல் பூஜை அறையில்
 வைத்து கடவுளிடம் வேண்டி அதன் பின்னர் பீரோ வில் வைத்தால் 
சகல ஐஸ்வர்யமும்  பெறலாம் . நீங்கள் ஏழையா ,நீங்களும் பணக்காரர்  ஆகலாம்   .தீபாவளி அன்று

Thursday, October 6, 2011

கார்த்திக் தொண்டைமான்

புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் ஸ்ரீ  பிரகதாம்பாள் தாஸ்  ராஜகோபாலத் தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.


இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22- வது வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.

1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்ச்  3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலை மதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.

ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . சிறந்த மோட்டார் வாகன தொழில் நுட்ப வல்லுனராக திகழ்ந்து மிக சாமான்ய மனிதானக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர்1997இல் மறைந்தார்.



தொண்டை மான் வம்சத்தில் இன்றைய தினம் புதுக்கோட்டை மக்களின் செல்ல பிள்ளையாக விளங்கக்கக் கூடியவர்  உயர்  திரு
 கார்த்திக் தொண்டைமான் அவர்களே என்று கூறுவதில்  மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.. அவரை பெருமை படுத்த வேண்டும் என்பதற்காக  இதை நான் இங்கு கூற வில்லை,  அவருடைய மகுடங்களில் ஜொலிக்கும் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.கார்த்திக் தொண்டைமான் அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்,கரை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் .இரக்க  சிந்தனை உள்ளம்  கொண்டவர் ,தன்னை தேடி வரும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற பொருள் உதவியை  இன்றளவும் செய்து  கொண்டிருக்க கூடிய  மனித நேயமிக்க மாண்பாளர். 
 
17.10.2011 அன்று நடை பெற உள்ள உள்ளாட்சி மன்ற  தேர்தலில் புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் பதவிக்கு
திரு. கார்த்திக் தொண்டைமான் அவர்கள் போட்டியிடுகிறார் என்ற செய்தியை அறிந்த புதுக்கோட்டை மக்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த தேசத்திற்காக தனது ராஜ்யத்தையே விட்டுக்  கொடுத்த  மன்னர் வம்சத்தில்  பிறந்த    திரு.  கார்த்திக் தொண்டை மான் அவர்கள் நகர் மன்ற தலைவராக மக்கள் சேவை செய்ய மக்களே விரும்பும்பொழுது ,மக்கள் அனைவரும் அவருக்கு வாக்கு அளிக்க முன் வருவது என்பது மக்களின் கடமைகளில்  ஒன்றே என்று கருதுகின்றேன்.
கார்த்திக் தொண்டைமான் போன்று ஓர் ஆயிரம் கார்த்திக் தொண்டை மான் இந்த பாரத தேசத்திற்கு வரவேண்டும்,பாரத தாயின் கண்ணீரை துடைக்க !.பாரத் மாத்தாக்கி ஜெய் !  






Friday, August 5, 2011

அய்யா திரு பஞ்சநாதன் DSP

தஞ்சாவூர் மாவட்டம்  மன்னார்குடியில் விவசாய குடும்பத்தில்    பிறந்து வளர்ந்த நம்முடைய திருவாளர் காவல் துறையில் செய்த அரும்பணிகளை இங்கே குறிப்பிடுவதில் நான்  பெருமை அடைகிறேன் . நம்முடைய திருவாளரை பெருமை படுத்து வதற்காக இதை  நான்  இங்கே குறிப்பிட வில்லை அவருடைய மகுடங்களில் ஜொலிக்கும் சிலவற்றை மட்டுமே இங்கே  குறிப்பிட விரும்புகிறேன் .


20.4.1949 ஆம் வருடம் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில்  பிறந்து வளர்ந்த  அய்யா  பஞ்சநாதன் அவர்கள் இளங்கலை தாவரவியல் பயின்று, அதன் பின்னர் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றவர் .1975 ஆம் வருடம் காவல்துறையில் துணை பயிற்சி ஆய்வாளராக  பொன்னமராவதி ல் 6 மாத காலம் பனி யாற்றினார்.
அதன் பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருகோகர்ணம் காவல் நிலையத்தில் 1976 ஆம் வருடம் பணியாற்றினார் .1976  மற்றும் 1977  ல் அரிமளம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்  ,மேலும் தனிப்பிரிவான நுண் அறிவுப்பிரிவில் நான்கு  ஆண்டு காலம் பணியாற்றியவர். 

அய்யா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1980 முதல் 1983 வரை நகர காவல் நிலையத்தில் பணியாற்றியவர்.

அய்யா பஞ்சநாதன் அவர்கள்  புதுக்கோட்டையில் பணியாற்றிய காலத்தில் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனாக இருந்தேன் .

அந்த கால கட்டத்தில் நகர காவல் நிலையம் தவிர வேறு காவல் நிலையம் கிடையாது .
அய்யா அவர்களின் பெயர் தெரியாதவர்கள் புதுக்கோட்டையில் பிறந்தவர்களாக இருக்க முடியாது , அய்யா அவர்கள்  அத்துணை பிரபலம் காரணம் காந்திநகர் ,சந்தை பேட்டை ,போஸ் நகர், வடக்கு 4  ஆகிய வீதிகளில்     ரௌடிசத்தை அடக்கியவர் .மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தையே  கலக்கிய பிரபல ரௌடியை தெருத்தெருவாக இழுத்து வந்து அந்த நபரின் கொட்டத்தை அடக்கி  புதுக்கோட்டை மாவட்ட சிறு வியாபாரிகள் மனதில் தெய்வமாக விளங்கியவர் .

அய்யா அவர்கள் புதுக்கோட்டையில் பணியாற்றிய காலத்தில் கீழ நான்காம் வீதியில் தேவ தாசி  முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  தங்களது குலத்தொழிலாக தாசித் தொழிலை  பின்பற்றி இருந்த காலம் ,அதாவது சாதரணமாக அந்த குறிப்பிட்ட தெருவழியே நல்லவர்கள் கூட நடந்து  செல்ல முடியாத காலம் .

குறிப்பிட்ட விலை மாதர்களை கைது செய்து சென்னை அல்லது பெங்களூர் போன்ற தொலை தூரத்தில் உள்ள ஊர்களுக்கு குறிப்பிட்ட பேருந்தின்  ஓட்டுனர் மற்றும் நடுத்துனர் பொறுப்பில் , விலை மாதர்கள் மறுபடியும் புதுக்கோட்டைக்கு  வராத வண்ணம் கடமையாற்றியவர் .விலை மாதர்களுக்கு
புனர் வாழ்வு அளிக்கும் வகையில் மளிகை கடை வைப்பதற்கு கடனாக  அன்றைய தினம் கலெக்டர் ஆக பணியாற்றிய திரு .முருகராஜ் போன்ற கலெக்டர் மூலமாக ஏற்பாடு செய்து கொடுத்தவர் அய்யா திரு பஞ்சநாதன் அவர்கள் தான் .அவர் பணியாற்றிய காலத்தில் ரௌடிகள்  மற்றும் விலை மாதர்கள் இல்லை என்பது பெருமைக்குரிய விஷயம் .
அய்யா அவர்கள் திருச்சியில்  DSP  யாக பனி யாற்றி பின்னர்  ஓய்வு பெற்றார் .

அய்யா அவர்களின் சேவையை பற்றி சொல்ல வேண்டுமானால் இங்கு எழுதுவதற்கு பக்கங்கள் போதாது ,அய்யா பஞ்சநாதன் போன்று ஓர் ஆயிரம் பஞ்சநாதன் இந்த பாரத தேசத்திற்கு வரவேண்டும்,பாரத தாயின் பெருமையை நிலை நாட்டிட !பாரத் மத்தாக்கி ஜே!

Wednesday, July 6, 2011

கேரளா கோவில் பொக்கிஷம்

மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கேரளா கோவில் பொக்கிஷம் திறக்கப்பட்ட மூன்று அறைகளில் உள்ளவற்றின் மதிப்பு மட்டுமே இன்றைய நிலையில், 90 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நான்கடி உயரமுள்ள, தங்கத்தால் ஆன விஷ்ணு சிலை மற்றும் பல்வேறு சிலைகள், 18 அடி நீள தங்க மாலை என, காலத்தால் மதிப்பிட முடியாத பழமையான பொருட்கள் இந்த அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.அதே நேரம், திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய விஜயநகரப் பேரரசுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பால், விஜயநகர காலத்து நாணயங்களும் இந்த அறைகளில் கிடைத்துள்ளன. இவை, வரலாற்று அறிஞர்களால் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.அறைகள் திறக்கப்படுவதற்கு முன் பேட்டியளித்த குழுத் தலைவர் முன்னாள் நீதிபதி கிருஷ்ணன், இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும் என நம்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலையில் இப்பணி மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது.

மன்னர் குடும்பத்து எளிமை : இந்தியாவில் அரச குடும்பங்களின் பராமரிப்பில் இருந்த கோவில் செல்வங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்பட்டதும், பல்வேறு வழிகளில் அக்குடும்பங்களால் செலவழிக்கப்பட்டதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்த அறைகளில் இருந்து ஒரு குண்டுமணி அளவுகூட காணாமல் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு, பத்மநாப சுவாமி மீது அரச குடும்பம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி தான் காரணம் என, மக்கள் கருதுகின்றனர்.கி.பி., 13ம் நூற்றாண்டில், மாலிக்கபூர் படையெடுப்பு நடந்த போது, பாண்டிய மன்னராக இருந்த வீரபாண்டியன் வலுவற்று தோல்வி அடைந்ததால், கோவில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
பாதுகாப்பு எவ்வாறு?பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பின்பு, மாநில மற்றும் மத்திய அரசுகளின் கைகளுக்கு வந்த பல்வேறு கோவில்களில் இருந்த அளப்பரிய செல்வங்கள் அனைத்தும் அரசின் கைகளுக்கே சென்றதும், அதன் பின் அவை பற்றிய தகவல்களே கிடைக்காததும், அல்லது அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டமையும் தான் அறிஞர்களின் கவலைக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
இதுகுறித்து, இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவர் நாராயணன் கூறியதாவது:இந்தச் செல்வங்களை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கக் கூடாது. இவை அனைத்தும் பழைய நிர்வாக முறைப்படி திருவிதாங்கூர் அரச குடும்பத்தாலேயே கோவிலில் பாதுகாக்கப்பட வேண்டும்.அரசுகளால் எடுக்கப்பட்ட கோவில்களில் இருந்த செல்வங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதும், மோசடி செய்யப்பட்டதும் நாம் அறிவோம். அது போன்ற சம்பவங்கள் இந்தக் கோவிலில் நடக்கக் கூடாது.கோவிலிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அதில் சில முக்கியமான பொருட்களை மட்டும் காட்சிக்கு வைத்து விட்டு, மற்றவற்றை ரகசிய அறைகளில் வைத்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.
வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளரான எம்.ஜி.சசிபூஷண், "வருங்கால தலைமுறைக்கும் இவை பற்றிய தகவல்கள் சேர வேண்டுமானால் இவை அனைத்தும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்' என்றார்.
அதேபோல், வி.எச்.பி., நாயர் சர்வீஸ் சொசைட்டி, நாராயண தர்ம பரிபாலன யோகம் போன்ற அமைப்புகள், இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மத்திய அல்லது மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இவற்றை கோவில் சொத்துகள் என அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்றும் கொள்ளும் என்ற பழமொழி பல ஆயிரம் சக்தி இன்று  பெற்றுள்ளது உண்மைதான் .
 

Saturday, June 18, 2011

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க அம்மா திருச்சி விஜயம்


 தேர்தலுக்கு பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று காலை 8 மணிக்கு, விமானம் மூலம் திருச்சிக்கு வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா , மாலை ஸ்ரீரங்கத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், "என் பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான். எனவே, நான் இங்கு அடிக்கடி வருவேன்' என்று பேசி, அ.தி.மு.க., பொதுச் செயலாளர்
 புரட்சி தலைவி அம்மா வாக்கு  சேகரித்தார்.
தேர்தலில் 41 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று  முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வரான பிறகு, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்கவும் 19ம் தேதி  முதல்வர்  திருச்சி வருகிறார் . அதன்படி, தமிழக முதல்வர் , விமானம் மூலம் இன்று காலை 8 மணிக்கு, திருச்சி வருகிறார். வரவேற்பு முடிந்ததும் முதல்வர் , சங்கம் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார்.

மாலை 5 மணியளவில், ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, தோட்டக்கலைத் துறை சார்பில், திருச்சியில் கட்டப்பட உள்ள தோட்டக்கலை கல்லூரி உட்பட, 306 கோடி ரூபாய் மதிப்பிலான, 38 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 430 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
நாளை மாலை, ஸ்ரீரங்கம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 21ம் தேதி மாலை, விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். முதல்வர் நிகழ்ச்சி என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உங்களின் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யலாமே .

Thursday, June 9, 2011

நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே !

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே ,அது நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே.இந்த பாடலின் வரிகள் மிகவும் அர்த்தமானது.   .  நான் ஆசிரியர் 
பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் 
 பொழுது, teaching practice க்காக ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்றேன் . அங்கு நான் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு  ஆங்கில பாடம் எடுத்தேன். 
அத்துணை மாணவரும் பாடம் எடுப்பதை கவனிக்க ஒரே ஒரு மாணவன் மட்டும் 
வகுப்பறையின் கரும்பலகையை நோக்காமல் பாட புத்தகத்தை கையில் 
எடுக்காமல் அலட்சியமாக அமர்ந்து இருந்தான்.வகுப்பு நேரம் முடிந்ததும் 
அந்த மாணவனைஅருகே  அழைத்தேன் .காலையில் என்ன தம்பி சாப்புட்டியா
என்றேன் ,அந்த மாணவனின் கண்கள் கலங்கியது  என்ன தம்பி ஏன் அழுகிற என்றேன் மிகவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். என்ன தம்பி சாப்புடலையா என்றேன் ?  ஆம் என்று தலை ஆட்டினான் ...........
ஏன் சாப்பிட வில்லை ,என்றன். ஸ்கூல் க்கு புறப்படும் பொழுது ,அப்பாவுக்கும் 
அம்மாவுக்கும் சண்டை என்றான் .பாவம் பெற்றோரின் சண்டை அவன் மனதை
பாதித்தது . ஒரு குழந்தை நல்ல ஒழுக்கத்துடன் இருப்பது என்பது  அவனுடைய
 சுற்று சுழலை பொறுத்தது .     குழந்தை பெற்றால் மட்டும் போதாது ,அவர்களின் 
எதிர்கால நலன் கருதி பொறுப்பாக வளர்த்து ஆளாக்க பாடு படவேண்டும் . 

Saturday, June 4, 2011

SAVARIMUTHU ARULDOSS MEMORIAL TRUST

அறக்கட்டளை சார்பாக உறுப்பினர்களுக்கு  சமுதாய பணியாற்றிட இலவச மோட்டார் பைக் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்குகிறார்








அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு அறக்கட்டளை  சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் இலவசமாக மோட்டார் பைக் வழங்கிய நிகழ்ச்சியின்
ஒரு பகுதி .

Wednesday, June 1, 2011

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த பொழுது எடுத்த புகை படம்( 2001  ஆம் வருடம்) அருகில் அன்றைய  மாவட்ட செயலாளர் மற்றும் நகர செயலாளர்
 2010  ஆம் வருடம் நடை பெற்ற பொது கூட்டத்தில் வரவேற்புரை

 மாணவர்களுக்கு அம்மா பிறந்த தினத்தன்று நோட் புக் வழங்கும் நிகழ்ச்சி.

 63 வது அம்மா பிறந்த தினத்தன்று நோட் புக் வழங்கும் நிகழ்ச்சி
 2010  ஆம் வருடம் 62 வது   அம்மா பிறந்த தினத்தன்று கொடியேற்றம்

சொன்னதை செய்த மாண்புமிகு அம்மா

சொன்னதை செய்த மாண்புமிகு அம்மா

தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 95 லட்சம் குடு‌ம்ப அ‌ட்டைக‌ள் உள்ளன. இதில் அரிசி பெற தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாதம்முதல் 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.


இதுபோல அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இந்த குடும்ப அட்டைகளுக்கு இன்று  முதல் இலவச அரிசி  மாண்புமிகு  முதலமைச்சர் 
அவர்கள் வழங்குகிறார்கள்.


‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர்  இன்று  காலை 10 மணிக்கு சென்னை  ஸ்ரீராம் நகரில் உள்ள ‌நியாய‌விலை கடையில் தொடங்கி வைக்கிறார்.

Friday, May 27, 2011

இருளில் மூழ்கியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 27 .05 .2011 அன்று இரவு சுமார் 7 .50 மணிக்கு
கடுமையான புயல் காற்று போல் பலமான காற்றுவீசியது  நகரமே 
நடுங்கி போனது .ஆளையே தூக்கும் அளவிற்கு அப்புடி ஒரு பலமான காற்று.வியாபார கடைகளில் வெளியில் நிப்பாட்டி வைத்திருந்த ஸ்டான்டிங் போர்டு அத்தனையும் சினிமாவில் வரும் காட்சிகளை போல் பறந்தது.சைக்கிள்கள் பறந்தன , அதனை தொடர்ந்து கடுமையான இடி மின்னல் புயல் புதுக்கோட்டை மக்கள் அனைவரும் இயற்கை அன்னை ஏதோ ஊரு விளைவிக்க போகிறாள் என அச்சத்தோடு வான மகளை பார்க்க ,திடீர் ,திடீர் என இடிகளை போட்டு, மெதுவாக ஆரம்பம் ஆனா மழை,தொடர்ந்து பெய்ந்து ,சூட்டை கிளப்பியது.கடுமையான கோடைகாலத்தில் பெய்ந்து 
கொண்டிருக்கும் இந்த மழை காய்ந்து கிடக்கும் பூமியை குளிர்விக்கும் மேலும் கம்மாய் மற்றும் 
குளங்களை நிரப்பும் .அருமையான மழை புதுக்கோட்டை நகரமே  

 ௨ மணி நேரம் இருளில் மூழ்கியது.

சாதி சான்றிதல் பெற

ஸ்கூல் அட்மிசன் துவங்கியதும், தாலுக்கா அலுவலகம் கலை  கட்ட துவங்கியது.ஏன் என்றால் ,மாணவர்களுக்கு சாதி சான்றிதல் வேண்டி 
விண்ணப்பங்கள் குவிந்தவண்ணம் உள்ளது .எனது நண்பரின் மகனுக்காக சாதி சான்றிதல் பெற விண்ணப்பம் பூர்த்தி செய்து ,உரிய அதிகாரியிடம் கையெழுத்து 
வாங்கி   சான்றிதல் பெற தேவையான ஆவணங்களை அதன் உடன் இணைத்து தாலுக்கா அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போடுமாறு அலுவலக ஊழியர் சொல்ல ,அதன்படி பெட்டியின் உள்ளே விண்ணப்பத்தை போட்டு, ஐந்து நாட்கள் கழித்து சான்றிதல் பெற திரும்ப அலுவலகம்  சென்றோம்.உங்களது சான்றிதல் இல்லை என்றனர் அலுவலக உழியர்கள் .ஏன் என்று கேட்டால் உங்களது விண்ணப்பம் காணமல் போய் இருக்கலாம், இல்லை எனில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்க பட்டிருக்கலாம் என்றனர் ,அலட்சியமாக ,நிராகரிப்பு செய்ய வேண்டும் எனில் ,நாம் உரிய ஆவணம் வைக்காமல் இருந்தால் நிராகரிப்பை ஏற்று கொள்ளலாம்.VAO  கையெழுத்து போடும் பொழுது உரிய ஆவணம் இணைக்கப்பட்டதை சரி  பார்த்த பின்னர் தான்  கையெழுத்து போடுவார் என்பது உலகம் அறிந்த உண்மை .சரி பார்க்கப்பட்ட 
ஒரு விண்ணப்பம் காணமல் போவது என்பது நிர்வாகத்தின் சீர் கேட்டை
 வெளிபடுத்தும்  அவலநிலை ஆகும் . நண்பர் மீண்டும் புதிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மீண்டும் உரிய அலுவலரிடம் கையெழுத்து பெற்ற பின்னர் ,இரண்டு நாள் கழித்து தான் சாதி சான்றிதல்
கிடைத்தது .

Saturday, May 21, 2011

தென்னையை பெற்றால் இளநீரு !பிள்ளையை பெற்றால் கண்ணீரு

தென்னையை பெற்றால் இளநீரு !பிள்ளையை பெற்றால் கண்ணீரு !என்ற வாசகத்தை படித்திருப்போம். அது தொடர்பான செய்தியை பார்போமா.தமிழகத்தில் இயங்கிகொண்டிருக்கின்ற     முன்னணி பள்ளிகளில் ஒன்றான ஒரு உயர்நிலை பள்ளிக்கு நண்பரின் மகனின்  பள்ளி சேர்க்கைக்கு சென்றிருந்தேன் . காலை ஒன்பது மணிக்கு பள்ளியின் உள்ளே சென்றோம் .சரியான கூட்டம் , பெற்றோர்கள் குழந்தைகள் என எல்லோரும் காத்திருக்க பள்ளியின் நிர்வாகம் ,வந்திருந்த யாரிடமும் சரியான மரியாதை கொடுக்கவில்லை. நாங்களும் அவர்களிடம் இருந்து மரியாதை எதுவும் 
எதிர்பார்காவில்லை.சரியான வெயில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை .
சுமார் பத்தரை மணி அளவு ஒரு ஆசிரியை வந்தார் ,பெற்றோர்களை நோக்கி 
குழந்தைகள் ஒரு வரிசையில் நில்லுங்கள் ,பெற்றோர்கள் ஒரு வரிசையில் நில்லுங்கள் என ஆணை இட்டார் ,  அந்த ஆசிரியை சொன்னதும் ஓடி அடித்து பெற்றோர் ஒரு வரிசையில் நின்றனர் ,பெற்றோர்கள் குழந்தைகளை நோக்கி ஓடு சீக்கிரம் வரிசையில் நில்லு என ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் கட்டளை இட, குழந்தைகள் தனி வரிசையில் ஓடி அடித்து பிடித்து நிற்க . மற்றொரு ஆசிரியை வரிசையில்
நின்றவர்களை நோக்கி யாரும் இங்கு நிற்க வேண்டாம் ,குழந்தைகள் மட்டும் அதோ அந்த மரத்தடியில் போய் நில்லுங்கள் என கட்டளை இட
மீண்டும் குழந்தைகள் பதறியடித்து மீண்டும் வேறு ஒரு இடத்திற்கு ஓட ,
அங்கு நின்ற ஒரு ஆசிரியை இங்கு நிற்க வேண்டாம் எல்லோரும் உட்காருங்கள் என குழந்தைகளை நோக்கி கட்டளை இட குழந்தைகள் ஓடி அடித்து கீழே  அமர்ந்தனர் .குழந்தைகள் அமர்ந்த இடம் கடும் வெயில் .
திடிரென அங்கு வந்த ஒரு ஆசிரியை  குறிப்பிட்ட பள்ளியின் பெயரை சொல்லி அந்த பள்ளியின் மாணவர்கள் மட்டும் இந்த வரிசையில் அமருங்கள் என சொல்ல இதர பள்ளிமாணவர்கள் எங்கே நிற்பது என விழித்தனர்.

மணி பனிரெண்டு ஆகிவிட்டது ,குறிப்பிட்ட  பள்ளியில் படித்தவர்கள் மட்டும் சேர்க்கைக்கான   விண்ணப்பம் கொடுத்தார்கள் . விண்ணப்பம் கொடுத்த பின்னர் சிஸ்டரை பாருங்கள் என்றனர். அதாவது சிஸ்டரை பார்த்த பின்னர் அவர் ஒரு சீட்டில் கையெழுத்து போடுவார் ,அதன் பின்னர் ,மற்றொரு சிஸ்டர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வார். அதன் பின்னர் பணம் கட்ட வேண்டும் ,இது அவர்கள் புதிய சேர்கை செய்யும் முறை.இதர பள்ளியில் இருந்து வந்த மாணவர்களை கடைசி  வரை பள்ளியில் முறையான பதில் கூறவும்  இல்லை .சேர்கை அனுமதிக்கான 

விண்ணப்பமும் வழங்கவில்லை .  

Friday, May 20, 2011

சூப்பர் ஸ்டார் நலம் பெற




நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது துணைவியார் லதா ரஜினிகாந்த் 
தெரிவித்துள்ளார் .ரசிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் நலம் பெற ஆலயங்களில் 
பிரார்த்தனை   தொடர்ந்து நடத்தி வருகின்றனர் . மக்கள் நலனில் அக்கறை கொண்ட 
ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.  

Thursday, May 19, 2011

ADMK க்கு மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்

புரட்சி தலைவி அம்மா அவர்கள் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் வாய்ப்பை இழந்தவர்களும் தொகுதி மக்களை சந்தித்து எளிமையான முறையில் நன்றி தெரிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா தெரிவித்துள்ளார். மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொழுது சம்மந்தப்பட்ட பகுதியின் கழக நிர்வாகிகளை அழைத்து சென்று அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்.ஒவ்வொரு நகர ,ஒன்றிய ,நிர்வாகிகளையும் உடன் அழைத்து
 செல்லவேண்டும்.நன்றி தெரிவிக்க செல்லும் பொழுது மக்கள் சொல்லும் குறை களை கேட்டு 
தக்க நடவடிக்கை எடுக்கும் படி அம்மா கூறியுள்ளார் .  அதே போல் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் தங்கள் போட்டியிட்ட தொகுதிக்கு சென்று
மக்களிடம் நன்றி  தெரிவிக்க வேண்டும்.மக்கள்  அதிமுகவின் மீது மாபெரும் நம்பிக்கை வைத்து 
மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி  தெரிவிக்க வேண்டும் 
என்று அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார் . 
 தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் தங்கள் ஓட்டுக்களை அளித்து பேராதரவு வழங்கியுள்ளனர். மக்கள் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ள அ.தி.மு.க., அரசு, தமிழக மக்கள் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களும், வெற்றி வாய்ப்பு இழந்த வேட்பாளர்களும், அவரவர் தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் செல்லும் போது எந்தவித ஆடம்பரமும், படாடோபமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றி தெரிவிக்கும் பணி எளிமையாக நடைபெற வேண்டும். மேடைகள் அமைத்தோ, பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்தோ நன்றி சொல்லும் பணியை மேற்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட கிராமம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி வட்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து, அ.தி.மு.க., மீது மாபெரும் நம்பிக்கை வைத்து, மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்.


Tuesday, May 17, 2011

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுயேச்சை பெற்ற வாக்குகள்

புதுக்கோட்டை:


பாஜக சார்பில் போட்டியிட்ட பழ. செல்வம் 1748 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட என். சீனிவாசன் 4098 வாக்குகளும், கருணாநிதி (சுயேச்சை) 380 வாக்குகளும், எஸ். சவாகீர் (சுயேச்சை) 417 வாக்குகளும், டி. செவந்திலிங்கம் (சுயேச்சை) 750 வாக்குகளும், வி. பரதன் (சுயேச்சை) 3901 வாக்குகளும், சி. ரவி (சுயேச்சை) 832 வாக்குகளும் பெற்றனர்.
திருமயம்:
பாஜக சார்பில் போட்டியிட்ட வடமலை 2686 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ். சஞ்சய்காந்தி 1021 வாக்குகளும், ஆர். இளங்கோ (சுயேச்சை) 1457 வாக்குகளும், ராம. சுப்பிரமணியன் (சுயேச்சை) 927 வாக்குகளும், எஸ். பாண்டியராஜன் (சுயேச்சை) 500 வாக்குகளும், சி. பாலமுருகன் (சுயேச்சை) 541 வாக்குகளும், எம். முரளி (எ) மீனாட்சிசுந்தரம் (சுயேச்சை) 560 வாக்குகளும், ஏ. ராதகிருஷ்ணன் (சுயேச்சை) 1046 வாக்குகளும் பெற்றனர். 

 ஆலங்குடி:
பாஜக சார்பில் போட்டியிட்ட எஸ். ஜெகன்நாதன் 2033 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ. சரவணன் 3666 வாக்குகளும், வாக்குகளும், பி. நாகமூர்த்தி (சுயேச்சை) 1414 வாக்குகளும் பெற்றனர்.

அறந்தாங்கி:
பாஜக சார்பில் போட்டியிட்ட கே. சபாபதி 2218 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ். அப்பாதுரை 2305 வாக்குகளும், எம். அசையாமணி (சுயேச்சை) 599 வாக்குகளும், எஸ். அஷ்ரப்கான் (சுயேச்சை) 1211 வாக்குகளும், கருணாகரன் (சுயேச்சை) 503 வாக்குகளும், கே.எம். ஷரீப் (சுயேச்சை) 2729 வாக்குகளும் பெற்றனர்.


கந்தர்வக்கோட்டை(தனி):




பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம். முருகேசன் 1073 வாக்குகளும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பி. ஆசைத்தம்பி 824 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். செல்வராணி 2974 வாக்குகளும், ஆர். சித்ரா (சுயேச்சை) 754 வாக்குகளும், கே. பாரதி (சுயேச்சை) 824 வாக்குகளும், வி. ரெத்தினம் (சுயே) 1357 வாக்குகளும் பெற்றனர்.



விராலிமலை:



இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட சவரிமுத்து 2639 வாக்குகளும், பி. அழகு (சுயேச்சை) 1404 வாக்குகளும், பழனியப்பன் (எ) புரட்சிகவிதாசன் (சுயேச்சை) 1144 வாக்குகளும், எம். பழனியப்பன் (சுயேச்சை) 15,397 வாக்குகளும், எம். ரமேஷ் (சுயேச்சை) 774 வாக்குகளும், பி. ராஜா (சுயேச்சை) 1403 வாக்குகளும் பெற்றனர்

Monday, May 16, 2011

தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற தங்கத்தாரகை

சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற தங்கத்தாரகை இதய தெய்வம் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம் .                 இவண்                                           
                                                                                            IVAN    இவண்
                                                                                பா. துரைராஜ்

                                                                             ADMK   வட்ட கழக செயலாளர்
                                                                                   34 வது வட்டம்                                                                                                                                       
                                                                                  புதுக்கோட்டை மாவட்டம்
  
                         சென்னை: பெண்களுக்கு தாலிக்கு தங்கம் இலவசம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, ஓய்வூதியத் தொகை உயர்வு உள்ளிட்ட ஏழு கோப்புகளில், கோட்டையில் பொறுப்பேற்றதும் முதல்வர்  கையெழுத்திட்டார்.


முதல்வராக மாண்புமிகு அம்மா  நேற்று பகலில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பொறுப்பேற்றார். பின், மாலை 6:40 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலக ஊழியர் சங்கம் சார்பில், மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின், முதல்வர் அறையில் பணியை துவக்கிய அம்மா , ஏழு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். நேற்று பவுர்ணமி என்பதால், முக்கிய உத்தரவுகளில் இரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவுகள் குறித்து, நிருபர்களிடம் அம்மா கூறியதாவது


* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆணை பிறப்பித்து, அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன்.


* இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.


* முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமென, தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதன்படி, ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியம், ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* பொது வினியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது


* தமிழகத்தின் கடலோர மீன் வளத்தை பாதுகாக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது.


* அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, மகப்பேறு கால சலுகையாக ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து, உத்தரவிடப்பட்டது.
* அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் செயல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு செயல்படுத்தவும், புதிய துறை ஒன்றை துவக்க உத்தரவிடப்பட்டது. இத்துறை, "சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' என்ற பெயரில் அழைக்கப்படும். இத்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். . முதல்வர் மாண்புமிகு அம்மா  அறிவித்துள்ள சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கத் துறையின் அமைச்சராக தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேலுமணி பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வருக்கு ராசி எண் 7:  அம்மா வுக்கு 7ம் எண் ராசியான எண்ணாக கருதப்படுவதால், 7ம் எண்ணுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆன்மிகம், ஜோதிடம், எண் கணிதம் மீது முதல்வர்  மிகுந்த நம்பிக்கை கொண்டவர். கடந்த 1991-96ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 9ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்தது. கடந்த 2001-06ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 6ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்து. தற்போது கேது திசையின் அடிப்படையில், 7ம் எண் அவருக்கு ராசியான எண்ணாகக் கருதப்படுகிறது. தேர்தலில் அ.தி.மு.க., வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 160 பேர் இடம் பெற்றனர். அதன் கூட்டுத்தொகை 7. அதேபோல் முதல்வர் பதவியை ஏற்ற நேற்று 16ம் தேதி. அதன் கூட்டுத்தொகை 7. புதிய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் 34 பேர். அதன் கூட்டுத்தொகையும் 7. முதல்வராக பொறுப்பேற்ற பின் அம்மா , நேற்று பழைய தலைமை செயலக அலுவலகத்திற்கு சென்று, 7 கோப்புகளில் கையெழுத்திட்டார்.








                                               

Sunday, May 15, 2011

ஒயின்


திராட்சைக்கு பெயர் போன பண்டைய பாரசிக நாட்டில் பதப்படுத்துவதற்காக பெரும் பெரும் ஜாடிகளில் சேகரித்து வைக்கப்பட்டிருத்த திரட்சைப் பழங்கள் ஒரு முறை அழுகி  புளித்து காடி போன்ற திரவமாகி கசிந்தது    தீய சக்திகளால் விசமாக மாறிவிட்டது என்று கருதி அதை அப்புறப்படுத்துமாறு பாரசிக மன்னர் கட்டளை இட்டார் .


இந்நிலையில் வாழ்க்கை வெறுத்து போன கிழவி விசமென நினைத்து அதை குடித்தார் .உடனே உடலில் ஒரு வித உற்சாகம் .மேலும் மேலும் குடிக்கவே மயங்கி கிழே சரிந்தார் .ஆனாலும் சாகவில்லை அந்த மூத்த குடிமகள் மயக்கம் தெளிந்த பின் 
அரசவைக்கு சென்ற அந்த பெண் நடந்ததை கூற .அரசவையில் உள்ளவர்கள் 
அந்த ஜாடி திரவத்தை குடித்து பார்த்து விட்டு அதற்க்கு ஒயின் என்று பெயர் சூட்டினர் .பண்டைய பாரசீக மொழியில் ஒயின் என்றால் மகிழ்ச்சி தரும் விஷம் 
என்று பொருள் .விஷம் மகிச்சி தருமா ? என்று கேள்வி கேட்ககூடாது . மதுவால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்க வேண்டும் .


 

Tuesday, May 3, 2011

நட்பு யாருடன் வைத்து கொள்ளலாம்

ஒரு மனிதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால்,அவன் யாருடன் நட்பாக இருக்கிறானோ அவனுடைய குணநலன்களை பற்றி தெரிந்தாலே,நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மனிதனின் குணத்தை புரிந்து கொள்ளலாம். நட்பு யாருடன் வைத்து கொள்ளலாம் யாருடன் நட்பு வைக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு நகரத்தில் முல்லா என்ற பணக்காரன் வசித்து வந்தான். முல்லாவிற்கு அவன் நடத்திகொண்டிருக்கும் ஜவுளி கடை மாபெரும் வருமானத்தை ஈட்டி தந்தது. அதே ஊரில் அக்பர் என்ற ஏழை வாழ்ந்து வந்தான். அருகில் உள்ள நகரத்திற்கு சென்று மொத்தமாக ஜவுளிகளை  வாங்கி கடை வீதியின் தெருக்களில் வைத்து விற்பான். அக்பரிடம் மக்கள் அதிகமாக ஜவுளிகளை வாங்க முல்லா வின் வியாபாரம் சிறுக சிறுக சரிந்தது. அக்பரின் வியாபாரம் அமோகமாக சென்றது.


அக்பரின் செயலால் வியாபாரத்தை இழந்த முல்லா வுக்கு  ஒரு யோசனை தோன்றியது. அக்பரை தனது வியாபாரத்தில் ஒரு பங்குதாரராக இணைத்து கொண்டால்,இழந்த வியாபாரத்தை மீண்டும் பிடிக்கலாம் என முடிவு செய்து,முல்லா தனது வேலை ஆளை அனுப்பி அக்பர் ஐ அழைத்து வர சொன்னான் .

அக்பர் நேரில் வந்ததும் முல்லா தனது விருப்பத்தை வெளிபடுத்தினார்.
முல்லாவின் கருத்தை கேட்ட அக்பர் நாளை தனது விருப்பத்தை வெளிபடுத்துவதாக தெரிவித்து சென்றார்.

இரவு வீட்டிற்க்கு சென்ற அக்பர்  முல்லா சொன்ன கருத்துக்களை மனதில் அசை போட்ட படியே கண் அயர்ந்து விட்டார். இரவு தூக்கத்தில் அக்பருக்கு ஒரு கனவு வந்தது .கனவில்.....................


ஒரு காட்டில் சிங்கம் ஓன்று வசித்து வந்தது.சிங்கம் ஒரு நாள் மான்  ஒன்றை  வேட்டை ஆடியது .தான் வேட்டை ஆடிய இரையை தின்று கொண்டு இருந்தது, அப்பொழுது அங்கு வந்த கழுகு சிங்கத்தை நோக்கி நாம் இன்று முதல் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோமா, என்று கேட்டது, என்ன ஒப்பந்தம் அது சொல் என்றது சிங்கம், நீர் காட்டுக்கு அரசர் ,நானோ ஆகாயத்துக்கு அரசன் நாம் இருவரும் தினமும் கிடைக்க கூடிய இரையை பகிர்ந்து கொள்வோம் என்றது .சிங்கம் சிறிது நேரம் யோசித்தது ......... கழுகை நோக்கி சிங்கம் நீ நினைத்தால் என்னை எழுத்தில் சந்தித்து விடலாம் ஏனெனில் நான் பூமியில் வசிப்பவன் ,ஆனால் நீயோ ஆகாயத்தில் பறப்பவன் .நான் நினைக்கும் நேரம் உன்னை சந்திக்க முடியாது . நீ நினைக்கும் நேரம் என்னை சந்திக்கலாம் ஏனெனில் நான் பூமியில் இருப்பவன் .ஆகையால் நம்முடைய நட்பு கூடா நட்பு. என்று சொன்னது.




கனவில் இருந்த அக்பர் விழித்து பார்த்து இந்த கனவின் மூலமாக தான் செய்ய இருந்த வியாபார ஒப்பந்தத்தை வேண்டாம் என அல்லா உணர வைத்து விட்டார் என்பதை புரிந்து முல்லாவிடம் சென்று அய்யா நான் என்னுடைய பாதையில் நான் செல்கிறேன் ,உங்களுடைய பாதையில் நீங்கள் செல்லுங்கள் என்று கூறி தெருவை நோக்கி புறப்பட்டான் அக்பர்.

Saturday, April 30, 2011

விடுறா வண்டியை புதுக்கோட்டைக்கு





 எனது நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட சுவையான அனுபவத்தின் ஒரு சில நகைச்சுவை பகுதிகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன் . தஞ்சாவூரில்  வசித்துகொண்டிருக்கும் நமது நண்பர் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகுந்த புலமை மிக்கவர் , சரளமாக ஆங்கிலம் பேசக்குடியவர் ,மேலும் நண்பர் மக்கள் பணியில் மிகுந்த அக்கறை  மிக்கவர். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அடிக்கடி பொது நிகழ்சிகளில் தலைமை ஏற்கக் குடியவர் . பண்புள்ளம் கொண்டவர்.நண்பர்
நல்ல உயரம் அதேபோல் கொஞ்சம் குண்டானவர் ( தொப்பை) உள்ளவர் .நண்பருக்கு சின்ன கெட்ட பழக்கம் உண்டு. 5
நிமிடம் தனிமையிலோ அல்லது யாருடனும் பேசாமல் இருந்தால் உடனே
உட்கார்ந்தபடியே தூங்கிவிடுவார்.

நண்பருக்கு திருச்சியில் உள்ள  ஒரு தனியார் ஆங்கில பள்ளி ஆண்டு விழாவிற்கு தலைமை ஏற்க அழைப்பு  வந்தது. பள்ளியின்  தாளாளர் யாரேன்று கேட்டால் காவல் துறையில் dsp
ஆக இருந்து ஓய்வு பெற்றவர் . நண்பரும்  அழைப்பை ஏற்று தனது நண்பரை அழைத்துக்கொண்டு திருச்சிக்கு பயணம் செய்தார் தனது பைக்கில் .நண்பர் சிறப்பு விருந்தினர் என்பதால் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து சென்றார் .( புது மாப்பிள்ளை போல் )

கீரனூர் வந்ததும்  ஹோட்டல் இல் எதாவது சாப்பிடுவோம் என இருவரும் பைக் ஐ நிப்பாட்டி சாப்பிட்டனர் . சாப்பிட்ட பின் வெற்றிலை பாக்கு போடுவோம் என நண்பரும் அவருடைய சக நண்பரும் முடிவு செய்தனர். வெற்றிலை  மற்றும்  பான்பராக்கும் சேர்த்து வாங்கியவர்  வெற்றிலையின் பின்னால்  
சுண்ணாம்பையும் தடவி  வைத்தார் .


பான்பராக் உடன் வெற்றிலை போட்டால் சுண்ணாம்பு தேவை இல்லை .கூடுதலாக சுண்ணாம்பு தடவினால் வாய் வெந்து விடும் நண்பரோ இது தெரியாமல் பான்பராக் உடன் தேவைக்கு அதிகமான சுண்ணாம்பையும் தடவி வாயில் தள்ளி சுவைக்க இரண்டு நிமிடம் தான் தாமதம் வாயெல்லாம் உரைக்க . உடன் வந்த நண்பரிடம் வாய் எல்லாம்
உரைக்குதே என்று கத்த சிக்கிரம் துப்புங்க தலைவரே வாயை கழுவலாம்  என சொல்ல நண்பர் வாயில் உள்ள வெற்றிலை பாக்கை இத் த்து  என  துப்ப நண்பருக்கு தொப்பை இருப்பதால் குனிந்து துப்ப வேண்டும் மாறாக நின்றபடியே துப்ப வெள்ளை வேட்டி சட்டை எல்லாம் ரத்தகரை போல்  ஆகிவிட்டது . இப்படி இந்த கோலத்துடன் நண்பர் திருச்சி 
சென்று பள்ளி நிகழ்ச்சியில் தலைமை ஏற்க முடியுமா ?


சட்டையை கழுவி விடலாம் என்றால் சனியன் பிடித்த கரை விட மாட்டேன் 
என்கிறது . 


வேண்டாம் விடுப்பா திருச்சி போனதும் புது சட்டை வாங்கி கொள்வோம் என இருவரும் திருச்சி
 நோக்கி பைக் ல் புறப்பட்டனர்.


திருச்சி போனதும் புதிய வேட்டி ஒன்றும், சட்டை இருப்பதிலே பெரிய சைஸ் எதுவோ அதை தேடி கண்டு பிடித்து  சட்டையை கடையில் போட்டு பார்க்காமல் நண்பர் வாங்கினார்.


உடன் வந்த நண்பர் ஊருக்குள்ள கொஞ்சம் அவுட்டர் போயி மூஞ்சி முகம் எல்லாம் கழுவலாம் 10  தண்ணீர் பாக்கெட் சோப்பும் வாங்கு என நண்பரிடம் சொல்ல அதே போல் நண்பரும் 
வாங்க .நல்ல ஒதுக்கு புறமான இடமாக பார்த்து நிப்பாட்டி .மூஞ்சி முகம் எல்லாம் கழுவி புதிய வேட்டியை எடுத்து கட்டி பின்னர் .

கரை பட்ட சட்டையை கோபமாக அருகில் இருந்த முள்ளில் வீசி அதன் பின்னர் 
கையில் இருந்த புது சட்டையை எடுத்து மாட்ட முயற்சி செய்தார், சட்டையில் உள்ள முதல் மூன்று பட்டன் 
மட்டும் தான் மாட்ட வந்தது மீதம் உள்ள மூன்று பட்டன் களையும்  மாட்ட
முடியவில்லை எனேன்றால் நண்பருக்கு தொப்பை இருப்பதால் மாட்ட முடியவில்லை, உடன் வந்த சக நண்பரிடம் நண்பா முச்சை இழுத்து பிடித்து கொள்கிறேன் எப்புடி யாவது பட்டன் ஐ போட்டு விட்டுடு என கெஞ்ச உடன் வந்த நண்பரும் எப்புடியாவது பட்டன் மாட்டிவிடலாம்
என முயற்சி செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் சட்டையை போட
முடியாமல் திணறி .போடமுடியாது என கூறி அசந்து  விட்டார்.


  தலைவரே  பேசாமல் அந்த சட்டையை சோப்பு போட்டு துவைத்து விடலாம் என இருவரும் முயற்சி செய்ய , அருகில் இருந்த வீட்டில்
நிலைமையை விளக்கி . முள்ளில் வேண்டாம் என வீசிய சட்டையை எடுத்து துவைத்து சட்டையை இரமாக இருக்கும் பொழுதே சட்டையை
மாற்றி தான் தலைமை தாங்க வேண்டிய பள்ளியை நோக்கி பைக் புறப்பட்டது .

பள்ளிக்கு சென்ற நண்பருக்கு அமோக வரவேற்பு , ஆனால் நண்பருக்கு சட்டை இரமாக இருப்பதால் un easy
யாக இருப்பதாக உணர்வு.
நண்பர் சென்று பதினைந்து நிமிடத்தில் முதல் பாடல் ஆரம்பம் ஆனது
நான்கு பாடல் முடிந்த பின்னர் தான் ,சிறப்பு விருந்தினர் மேடை ஏறவேண்டும். அதற்காக நண்பர்   காத்திருக்க ,காத்திருந்த வேளையில்
கண்  அயர்ந்து விட்டார்.  

மேடையில் ஏதோ ஒரு பெண் நாட்டியம் ஆட சிறப்பு விருத்தினர் ஆக
வந்த நமது நண்பரோ குறட்டை விட்டு தூங்க, பள்ளியின் தாளார் சங்கடப்பட நண்பருடன்  வந்த மற்றொரு நண்பர் நிலைமையை புரிந்து தலைவரே எழுந்திரிங்க வாங்க கொஞ்சம் நடப்போம் என கூப்பிட,

பாத் ரூம் செல்வது போல் பாசாங்கு காட்டி கண் இமைக்கும் நேரத்தில்
இருவரும் பைக்கில் புறப்பட்டு பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் செல்ல ,அங்கு புறப்பட்ட வண்டி திருச்சி ஏர்போர்ட் இல் தான் நின்றது ,
எனேன்றால் நண்பரின் செல் போன் சிணுங்க நம்பர் ஐ பார்த்தால் பள்ளி  தாளாளரின் நம்பர். நண்பர் செல் போன் ஐ தொட வில்லை . மாறாக (நாட்டமை படத்தில் vijayakumar சொல்வது போல் )  விடுறா வண்டியை புதுகோட்டை க்கு என்றார் நண்பர் .  பள்ளியில் சிறப்பு விருந்தினர் மேடைக்கு அழைக்கப்படுகிறார் என speaker பாக்ஸ் அலறியது .