Pages

Friday, May 27, 2011

இருளில் மூழ்கியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 27 .05 .2011 அன்று இரவு சுமார் 7 .50 மணிக்கு
கடுமையான புயல் காற்று போல் பலமான காற்றுவீசியது  நகரமே 
நடுங்கி போனது .ஆளையே தூக்கும் அளவிற்கு அப்புடி ஒரு பலமான காற்று.வியாபார கடைகளில் வெளியில் நிப்பாட்டி வைத்திருந்த ஸ்டான்டிங் போர்டு அத்தனையும் சினிமாவில் வரும் காட்சிகளை போல் பறந்தது.சைக்கிள்கள் பறந்தன , அதனை தொடர்ந்து கடுமையான இடி மின்னல் புயல் புதுக்கோட்டை மக்கள் அனைவரும் இயற்கை அன்னை ஏதோ ஊரு விளைவிக்க போகிறாள் என அச்சத்தோடு வான மகளை பார்க்க ,திடீர் ,திடீர் என இடிகளை போட்டு, மெதுவாக ஆரம்பம் ஆனா மழை,தொடர்ந்து பெய்ந்து ,சூட்டை கிளப்பியது.கடுமையான கோடைகாலத்தில் பெய்ந்து 
கொண்டிருக்கும் இந்த மழை காய்ந்து கிடக்கும் பூமியை குளிர்விக்கும் மேலும் கம்மாய் மற்றும் 
குளங்களை நிரப்பும் .அருமையான மழை புதுக்கோட்டை நகரமே  

 ௨ மணி நேரம் இருளில் மூழ்கியது.

சாதி சான்றிதல் பெற

ஸ்கூல் அட்மிசன் துவங்கியதும், தாலுக்கா அலுவலகம் கலை  கட்ட துவங்கியது.ஏன் என்றால் ,மாணவர்களுக்கு சாதி சான்றிதல் வேண்டி 
விண்ணப்பங்கள் குவிந்தவண்ணம் உள்ளது .எனது நண்பரின் மகனுக்காக சாதி சான்றிதல் பெற விண்ணப்பம் பூர்த்தி செய்து ,உரிய அதிகாரியிடம் கையெழுத்து 
வாங்கி   சான்றிதல் பெற தேவையான ஆவணங்களை அதன் உடன் இணைத்து தாலுக்கா அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போடுமாறு அலுவலக ஊழியர் சொல்ல ,அதன்படி பெட்டியின் உள்ளே விண்ணப்பத்தை போட்டு, ஐந்து நாட்கள் கழித்து சான்றிதல் பெற திரும்ப அலுவலகம்  சென்றோம்.உங்களது சான்றிதல் இல்லை என்றனர் அலுவலக உழியர்கள் .ஏன் என்று கேட்டால் உங்களது விண்ணப்பம் காணமல் போய் இருக்கலாம், இல்லை எனில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்க பட்டிருக்கலாம் என்றனர் ,அலட்சியமாக ,நிராகரிப்பு செய்ய வேண்டும் எனில் ,நாம் உரிய ஆவணம் வைக்காமல் இருந்தால் நிராகரிப்பை ஏற்று கொள்ளலாம்.VAO  கையெழுத்து போடும் பொழுது உரிய ஆவணம் இணைக்கப்பட்டதை சரி  பார்த்த பின்னர் தான்  கையெழுத்து போடுவார் என்பது உலகம் அறிந்த உண்மை .சரி பார்க்கப்பட்ட 
ஒரு விண்ணப்பம் காணமல் போவது என்பது நிர்வாகத்தின் சீர் கேட்டை
 வெளிபடுத்தும்  அவலநிலை ஆகும் . நண்பர் மீண்டும் புதிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மீண்டும் உரிய அலுவலரிடம் கையெழுத்து பெற்ற பின்னர் ,இரண்டு நாள் கழித்து தான் சாதி சான்றிதல்
கிடைத்தது .

Saturday, May 21, 2011

தென்னையை பெற்றால் இளநீரு !பிள்ளையை பெற்றால் கண்ணீரு

தென்னையை பெற்றால் இளநீரு !பிள்ளையை பெற்றால் கண்ணீரு !என்ற வாசகத்தை படித்திருப்போம். அது தொடர்பான செய்தியை பார்போமா.தமிழகத்தில் இயங்கிகொண்டிருக்கின்ற     முன்னணி பள்ளிகளில் ஒன்றான ஒரு உயர்நிலை பள்ளிக்கு நண்பரின் மகனின்  பள்ளி சேர்க்கைக்கு சென்றிருந்தேன் . காலை ஒன்பது மணிக்கு பள்ளியின் உள்ளே சென்றோம் .சரியான கூட்டம் , பெற்றோர்கள் குழந்தைகள் என எல்லோரும் காத்திருக்க பள்ளியின் நிர்வாகம் ,வந்திருந்த யாரிடமும் சரியான மரியாதை கொடுக்கவில்லை. நாங்களும் அவர்களிடம் இருந்து மரியாதை எதுவும் 
எதிர்பார்காவில்லை.சரியான வெயில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை .
சுமார் பத்தரை மணி அளவு ஒரு ஆசிரியை வந்தார் ,பெற்றோர்களை நோக்கி 
குழந்தைகள் ஒரு வரிசையில் நில்லுங்கள் ,பெற்றோர்கள் ஒரு வரிசையில் நில்லுங்கள் என ஆணை இட்டார் ,  அந்த ஆசிரியை சொன்னதும் ஓடி அடித்து பெற்றோர் ஒரு வரிசையில் நின்றனர் ,பெற்றோர்கள் குழந்தைகளை நோக்கி ஓடு சீக்கிரம் வரிசையில் நில்லு என ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் கட்டளை இட, குழந்தைகள் தனி வரிசையில் ஓடி அடித்து பிடித்து நிற்க . மற்றொரு ஆசிரியை வரிசையில்
நின்றவர்களை நோக்கி யாரும் இங்கு நிற்க வேண்டாம் ,குழந்தைகள் மட்டும் அதோ அந்த மரத்தடியில் போய் நில்லுங்கள் என கட்டளை இட
மீண்டும் குழந்தைகள் பதறியடித்து மீண்டும் வேறு ஒரு இடத்திற்கு ஓட ,
அங்கு நின்ற ஒரு ஆசிரியை இங்கு நிற்க வேண்டாம் எல்லோரும் உட்காருங்கள் என குழந்தைகளை நோக்கி கட்டளை இட குழந்தைகள் ஓடி அடித்து கீழே  அமர்ந்தனர் .குழந்தைகள் அமர்ந்த இடம் கடும் வெயில் .
திடிரென அங்கு வந்த ஒரு ஆசிரியை  குறிப்பிட்ட பள்ளியின் பெயரை சொல்லி அந்த பள்ளியின் மாணவர்கள் மட்டும் இந்த வரிசையில் அமருங்கள் என சொல்ல இதர பள்ளிமாணவர்கள் எங்கே நிற்பது என விழித்தனர்.

மணி பனிரெண்டு ஆகிவிட்டது ,குறிப்பிட்ட  பள்ளியில் படித்தவர்கள் மட்டும் சேர்க்கைக்கான   விண்ணப்பம் கொடுத்தார்கள் . விண்ணப்பம் கொடுத்த பின்னர் சிஸ்டரை பாருங்கள் என்றனர். அதாவது சிஸ்டரை பார்த்த பின்னர் அவர் ஒரு சீட்டில் கையெழுத்து போடுவார் ,அதன் பின்னர் ,மற்றொரு சிஸ்டர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வார். அதன் பின்னர் பணம் கட்ட வேண்டும் ,இது அவர்கள் புதிய சேர்கை செய்யும் முறை.இதர பள்ளியில் இருந்து வந்த மாணவர்களை கடைசி  வரை பள்ளியில் முறையான பதில் கூறவும்  இல்லை .சேர்கை அனுமதிக்கான 

விண்ணப்பமும் வழங்கவில்லை .  

Friday, May 20, 2011

சூப்பர் ஸ்டார் நலம் பெற




நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது துணைவியார் லதா ரஜினிகாந்த் 
தெரிவித்துள்ளார் .ரசிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் நலம் பெற ஆலயங்களில் 
பிரார்த்தனை   தொடர்ந்து நடத்தி வருகின்றனர் . மக்கள் நலனில் அக்கறை கொண்ட 
ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.  

Thursday, May 19, 2011

ADMK க்கு மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்

புரட்சி தலைவி அம்மா அவர்கள் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் வாய்ப்பை இழந்தவர்களும் தொகுதி மக்களை சந்தித்து எளிமையான முறையில் நன்றி தெரிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா தெரிவித்துள்ளார். மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொழுது சம்மந்தப்பட்ட பகுதியின் கழக நிர்வாகிகளை அழைத்து சென்று அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்.ஒவ்வொரு நகர ,ஒன்றிய ,நிர்வாகிகளையும் உடன் அழைத்து
 செல்லவேண்டும்.நன்றி தெரிவிக்க செல்லும் பொழுது மக்கள் சொல்லும் குறை களை கேட்டு 
தக்க நடவடிக்கை எடுக்கும் படி அம்மா கூறியுள்ளார் .  அதே போல் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் தங்கள் போட்டியிட்ட தொகுதிக்கு சென்று
மக்களிடம் நன்றி  தெரிவிக்க வேண்டும்.மக்கள்  அதிமுகவின் மீது மாபெரும் நம்பிக்கை வைத்து 
மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி  தெரிவிக்க வேண்டும் 
என்று அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார் . 
 தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் தங்கள் ஓட்டுக்களை அளித்து பேராதரவு வழங்கியுள்ளனர். மக்கள் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ள அ.தி.மு.க., அரசு, தமிழக மக்கள் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களும், வெற்றி வாய்ப்பு இழந்த வேட்பாளர்களும், அவரவர் தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் செல்லும் போது எந்தவித ஆடம்பரமும், படாடோபமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றி தெரிவிக்கும் பணி எளிமையாக நடைபெற வேண்டும். மேடைகள் அமைத்தோ, பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்தோ நன்றி சொல்லும் பணியை மேற்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட கிராமம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி வட்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து, அ.தி.மு.க., மீது மாபெரும் நம்பிக்கை வைத்து, மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்.


Tuesday, May 17, 2011

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுயேச்சை பெற்ற வாக்குகள்

புதுக்கோட்டை:


பாஜக சார்பில் போட்டியிட்ட பழ. செல்வம் 1748 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட என். சீனிவாசன் 4098 வாக்குகளும், கருணாநிதி (சுயேச்சை) 380 வாக்குகளும், எஸ். சவாகீர் (சுயேச்சை) 417 வாக்குகளும், டி. செவந்திலிங்கம் (சுயேச்சை) 750 வாக்குகளும், வி. பரதன் (சுயேச்சை) 3901 வாக்குகளும், சி. ரவி (சுயேச்சை) 832 வாக்குகளும் பெற்றனர்.
திருமயம்:
பாஜக சார்பில் போட்டியிட்ட வடமலை 2686 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ். சஞ்சய்காந்தி 1021 வாக்குகளும், ஆர். இளங்கோ (சுயேச்சை) 1457 வாக்குகளும், ராம. சுப்பிரமணியன் (சுயேச்சை) 927 வாக்குகளும், எஸ். பாண்டியராஜன் (சுயேச்சை) 500 வாக்குகளும், சி. பாலமுருகன் (சுயேச்சை) 541 வாக்குகளும், எம். முரளி (எ) மீனாட்சிசுந்தரம் (சுயேச்சை) 560 வாக்குகளும், ஏ. ராதகிருஷ்ணன் (சுயேச்சை) 1046 வாக்குகளும் பெற்றனர். 

 ஆலங்குடி:
பாஜக சார்பில் போட்டியிட்ட எஸ். ஜெகன்நாதன் 2033 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ. சரவணன் 3666 வாக்குகளும், வாக்குகளும், பி. நாகமூர்த்தி (சுயேச்சை) 1414 வாக்குகளும் பெற்றனர்.

அறந்தாங்கி:
பாஜக சார்பில் போட்டியிட்ட கே. சபாபதி 2218 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ். அப்பாதுரை 2305 வாக்குகளும், எம். அசையாமணி (சுயேச்சை) 599 வாக்குகளும், எஸ். அஷ்ரப்கான் (சுயேச்சை) 1211 வாக்குகளும், கருணாகரன் (சுயேச்சை) 503 வாக்குகளும், கே.எம். ஷரீப் (சுயேச்சை) 2729 வாக்குகளும் பெற்றனர்.


கந்தர்வக்கோட்டை(தனி):




பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம். முருகேசன் 1073 வாக்குகளும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பி. ஆசைத்தம்பி 824 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். செல்வராணி 2974 வாக்குகளும், ஆர். சித்ரா (சுயேச்சை) 754 வாக்குகளும், கே. பாரதி (சுயேச்சை) 824 வாக்குகளும், வி. ரெத்தினம் (சுயே) 1357 வாக்குகளும் பெற்றனர்.



விராலிமலை:



இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட சவரிமுத்து 2639 வாக்குகளும், பி. அழகு (சுயேச்சை) 1404 வாக்குகளும், பழனியப்பன் (எ) புரட்சிகவிதாசன் (சுயேச்சை) 1144 வாக்குகளும், எம். பழனியப்பன் (சுயேச்சை) 15,397 வாக்குகளும், எம். ரமேஷ் (சுயேச்சை) 774 வாக்குகளும், பி. ராஜா (சுயேச்சை) 1403 வாக்குகளும் பெற்றனர்

Monday, May 16, 2011

தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற தங்கத்தாரகை

சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற தங்கத்தாரகை இதய தெய்வம் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம் .                 இவண்                                           
                                                                                            IVAN    இவண்
                                                                                பா. துரைராஜ்

                                                                             ADMK   வட்ட கழக செயலாளர்
                                                                                   34 வது வட்டம்                                                                                                                                       
                                                                                  புதுக்கோட்டை மாவட்டம்
  
                         சென்னை: பெண்களுக்கு தாலிக்கு தங்கம் இலவசம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, ஓய்வூதியத் தொகை உயர்வு உள்ளிட்ட ஏழு கோப்புகளில், கோட்டையில் பொறுப்பேற்றதும் முதல்வர்  கையெழுத்திட்டார்.


முதல்வராக மாண்புமிகு அம்மா  நேற்று பகலில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பொறுப்பேற்றார். பின், மாலை 6:40 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலக ஊழியர் சங்கம் சார்பில், மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின், முதல்வர் அறையில் பணியை துவக்கிய அம்மா , ஏழு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். நேற்று பவுர்ணமி என்பதால், முக்கிய உத்தரவுகளில் இரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவுகள் குறித்து, நிருபர்களிடம் அம்மா கூறியதாவது


* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆணை பிறப்பித்து, அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன்.


* இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.


* முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமென, தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதன்படி, ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியம், ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* பொது வினியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது


* தமிழகத்தின் கடலோர மீன் வளத்தை பாதுகாக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது.


* அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, மகப்பேறு கால சலுகையாக ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து, உத்தரவிடப்பட்டது.
* அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் செயல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு செயல்படுத்தவும், புதிய துறை ஒன்றை துவக்க உத்தரவிடப்பட்டது. இத்துறை, "சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' என்ற பெயரில் அழைக்கப்படும். இத்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். . முதல்வர் மாண்புமிகு அம்மா  அறிவித்துள்ள சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கத் துறையின் அமைச்சராக தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேலுமணி பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வருக்கு ராசி எண் 7:  அம்மா வுக்கு 7ம் எண் ராசியான எண்ணாக கருதப்படுவதால், 7ம் எண்ணுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆன்மிகம், ஜோதிடம், எண் கணிதம் மீது முதல்வர்  மிகுந்த நம்பிக்கை கொண்டவர். கடந்த 1991-96ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 9ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்தது. கடந்த 2001-06ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 6ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்து. தற்போது கேது திசையின் அடிப்படையில், 7ம் எண் அவருக்கு ராசியான எண்ணாகக் கருதப்படுகிறது. தேர்தலில் அ.தி.மு.க., வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 160 பேர் இடம் பெற்றனர். அதன் கூட்டுத்தொகை 7. அதேபோல் முதல்வர் பதவியை ஏற்ற நேற்று 16ம் தேதி. அதன் கூட்டுத்தொகை 7. புதிய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் 34 பேர். அதன் கூட்டுத்தொகையும் 7. முதல்வராக பொறுப்பேற்ற பின் அம்மா , நேற்று பழைய தலைமை செயலக அலுவலகத்திற்கு சென்று, 7 கோப்புகளில் கையெழுத்திட்டார்.








                                               

Sunday, May 15, 2011

ஒயின்


திராட்சைக்கு பெயர் போன பண்டைய பாரசிக நாட்டில் பதப்படுத்துவதற்காக பெரும் பெரும் ஜாடிகளில் சேகரித்து வைக்கப்பட்டிருத்த திரட்சைப் பழங்கள் ஒரு முறை அழுகி  புளித்து காடி போன்ற திரவமாகி கசிந்தது    தீய சக்திகளால் விசமாக மாறிவிட்டது என்று கருதி அதை அப்புறப்படுத்துமாறு பாரசிக மன்னர் கட்டளை இட்டார் .


இந்நிலையில் வாழ்க்கை வெறுத்து போன கிழவி விசமென நினைத்து அதை குடித்தார் .உடனே உடலில் ஒரு வித உற்சாகம் .மேலும் மேலும் குடிக்கவே மயங்கி கிழே சரிந்தார் .ஆனாலும் சாகவில்லை அந்த மூத்த குடிமகள் மயக்கம் தெளிந்த பின் 
அரசவைக்கு சென்ற அந்த பெண் நடந்ததை கூற .அரசவையில் உள்ளவர்கள் 
அந்த ஜாடி திரவத்தை குடித்து பார்த்து விட்டு அதற்க்கு ஒயின் என்று பெயர் சூட்டினர் .பண்டைய பாரசீக மொழியில் ஒயின் என்றால் மகிழ்ச்சி தரும் விஷம் 
என்று பொருள் .விஷம் மகிச்சி தருமா ? என்று கேள்வி கேட்ககூடாது . மதுவால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்க வேண்டும் .


 

Tuesday, May 3, 2011

நட்பு யாருடன் வைத்து கொள்ளலாம்

ஒரு மனிதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால்,அவன் யாருடன் நட்பாக இருக்கிறானோ அவனுடைய குணநலன்களை பற்றி தெரிந்தாலே,நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மனிதனின் குணத்தை புரிந்து கொள்ளலாம். நட்பு யாருடன் வைத்து கொள்ளலாம் யாருடன் நட்பு வைக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு நகரத்தில் முல்லா என்ற பணக்காரன் வசித்து வந்தான். முல்லாவிற்கு அவன் நடத்திகொண்டிருக்கும் ஜவுளி கடை மாபெரும் வருமானத்தை ஈட்டி தந்தது. அதே ஊரில் அக்பர் என்ற ஏழை வாழ்ந்து வந்தான். அருகில் உள்ள நகரத்திற்கு சென்று மொத்தமாக ஜவுளிகளை  வாங்கி கடை வீதியின் தெருக்களில் வைத்து விற்பான். அக்பரிடம் மக்கள் அதிகமாக ஜவுளிகளை வாங்க முல்லா வின் வியாபாரம் சிறுக சிறுக சரிந்தது. அக்பரின் வியாபாரம் அமோகமாக சென்றது.


அக்பரின் செயலால் வியாபாரத்தை இழந்த முல்லா வுக்கு  ஒரு யோசனை தோன்றியது. அக்பரை தனது வியாபாரத்தில் ஒரு பங்குதாரராக இணைத்து கொண்டால்,இழந்த வியாபாரத்தை மீண்டும் பிடிக்கலாம் என முடிவு செய்து,முல்லா தனது வேலை ஆளை அனுப்பி அக்பர் ஐ அழைத்து வர சொன்னான் .

அக்பர் நேரில் வந்ததும் முல்லா தனது விருப்பத்தை வெளிபடுத்தினார்.
முல்லாவின் கருத்தை கேட்ட அக்பர் நாளை தனது விருப்பத்தை வெளிபடுத்துவதாக தெரிவித்து சென்றார்.

இரவு வீட்டிற்க்கு சென்ற அக்பர்  முல்லா சொன்ன கருத்துக்களை மனதில் அசை போட்ட படியே கண் அயர்ந்து விட்டார். இரவு தூக்கத்தில் அக்பருக்கு ஒரு கனவு வந்தது .கனவில்.....................


ஒரு காட்டில் சிங்கம் ஓன்று வசித்து வந்தது.சிங்கம் ஒரு நாள் மான்  ஒன்றை  வேட்டை ஆடியது .தான் வேட்டை ஆடிய இரையை தின்று கொண்டு இருந்தது, அப்பொழுது அங்கு வந்த கழுகு சிங்கத்தை நோக்கி நாம் இன்று முதல் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோமா, என்று கேட்டது, என்ன ஒப்பந்தம் அது சொல் என்றது சிங்கம், நீர் காட்டுக்கு அரசர் ,நானோ ஆகாயத்துக்கு அரசன் நாம் இருவரும் தினமும் கிடைக்க கூடிய இரையை பகிர்ந்து கொள்வோம் என்றது .சிங்கம் சிறிது நேரம் யோசித்தது ......... கழுகை நோக்கி சிங்கம் நீ நினைத்தால் என்னை எழுத்தில் சந்தித்து விடலாம் ஏனெனில் நான் பூமியில் வசிப்பவன் ,ஆனால் நீயோ ஆகாயத்தில் பறப்பவன் .நான் நினைக்கும் நேரம் உன்னை சந்திக்க முடியாது . நீ நினைக்கும் நேரம் என்னை சந்திக்கலாம் ஏனெனில் நான் பூமியில் இருப்பவன் .ஆகையால் நம்முடைய நட்பு கூடா நட்பு. என்று சொன்னது.




கனவில் இருந்த அக்பர் விழித்து பார்த்து இந்த கனவின் மூலமாக தான் செய்ய இருந்த வியாபார ஒப்பந்தத்தை வேண்டாம் என அல்லா உணர வைத்து விட்டார் என்பதை புரிந்து முல்லாவிடம் சென்று அய்யா நான் என்னுடைய பாதையில் நான் செல்கிறேன் ,உங்களுடைய பாதையில் நீங்கள் செல்லுங்கள் என்று கூறி தெருவை நோக்கி புறப்பட்டான் அக்பர்.