Pages

Friday, March 4, 2011

மர்மம் 2

மூர்த்திபோலீஸ் ஸ்டேஷன் இல் இருந்து புறப்பட்ட தனக்கு  வேண்டியவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி புலம்பினான் .காவலர்கள் சொன்ன தேதியில் தான் விசாரணைக்கு செல்ல lawer  ஐ சந்தித்தான்  .ஒன்னும் கவலை படவேண்டாம் தம்பி நான் பாத்துகிறேன் ,குறிப்பிட்ட தேதியில் அந்த ஊர் sp யை பாப்போம் .நீங்க அதற்க்கு வேண்டிய ஏற்பாடை செய் புறபடு . ,கொலை செய்ற கொலைகராங்கலையே நான் காப்பத்துவேன் ஒன்னும் பயப்பட வேண்டாம் புறபடு. 



நல்ல பக்க பலத்தோடு குறிப்பிட்ட ஊர் நோக்கி குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியை சந்திக்க சென்ற அனைவருக்கும் ஏமாற்றம் தான்
மிஞ்சியது ,காரணம் அன்று அந்த அதிகாரி சென்னை ஹை கோர்ட் சென்றுள்ளார். 


என்னடா இன்னும் 7 1 /௨ ஆரம்பம் ஆகலைன்னு படிக்கிற வாசகர்கள் கேட்கலாம்
 




இரண்டுநாள் கழித்து குறிப்பிட்ட அதிகாரிய சந்திக்க முடிவெடுத்தாங்க.அன்றைக்கு இரவு மணி எட்டு இருக்கும் நண்பர்கள் எல்லாம் வரகூடிய இடத்தில் மூர்த்தி காத்திருந்தான் .


ஆனா அவனோட மனசு ஏனோ திக் திக் என்று அடித்தது .ராஜனும் ,பீட்டர்  ரும் வழக்கமா வரவேண்டிய அந்த புதிதாய் கட்டி கொண்டு இருக்கும் கட்டிடம் முன்னால் குமிக்கப்பட்டிருக்கும் மணலில் படுத்திருந்த மூர்த்தி யிடம் ,டே என்னடா ஆள் ஒரு மாதிரியா படுத்திருக்க .
ஒன்னும் இல்லை நண்பா எங்க அம்மா படிக்காதவங்க அது போன வருஷம் செஞ்ச ஒரு முட்டாள் தனத்தாள் என்னைய போலீஸ் விசாரணைக்கு வர சொல்லுது .

நண்பா பீட்டர் எனக்கு ஒரு உதவி செய்வியா, சொல்லு மூர்த்தி என்ன செய்யணும் உண்மைய சொல்லு என்ன உதவி வேண்டுமானாலும்  செய்யுறேன்  .

நாளைக்கு காலைல காஞ்சிபுரம் போய் sp  யை பார்த்து விசாரணையை முடிக்கணும் எதாவது வண்டி ஏற்பாடு செய் .

மூர்தியை பார்த்து ராஜன் கேட்டான் டே அப்பா என்ன விசாரணை ஏன் உன்னோட கண்ணு கலங்குது நீ எதுவும் தப்பு செய்யலை இல்ல .
இல்லைடா எங்க அம்மா பசின்னு வந்த ஒரு பொண்ணுக்கு சாப்பாடு போட்ட ஒரே குற்றத்துக்காக  அந்த பொன்னை நான் 
கடத்தி வித்துட்டதா போலீஸ் மிரட்டுறாங்க .என சொல்லி ஓவென அழுதான் 
ஒன்னும் பயப்படாதே நாங்களும் உன்னோட நாளை காலை விசாரணைக்கு 
வரோம் எனக்கு வேண்டியவர் டாட்டா சுமோ வாடகைக்கு விடுறார் .நாளைக்கு 
எல்லோரும் காஞ்சிபுரம் நோக்கி போவோம் என்றான் பீட்டர்

விடிய போற பொழுது நல்ல பொழுதா இருக்காது   


விடாது கருப்பு

No comments:

Post a Comment