Pages

Thursday, December 9, 2010

சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயபாஸ்கர்

மக்களின் அடிப்படை தேவைகளில் மிக முக்கியமான ஓன்று . உண்ணஉணவு,உடுக்க உடை,இருக்க இடம்,இவற்றை தாண்டி மிக முக்கியமானது,குடி தண்ணீர் ஆகும் .சுமார் 20  ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைகூறுகிறேன். எங்கள்  வீட்டில் கிணறு     இருந்தது,ஆனால் கிணற்றில் தண்ணீர் என்பது மழை காலங்களில்    மட்டும் தான் இருக்கும்.வெயில்  காலங்களில் வீட்டில் துணி துவைப்பதற்கு,குளிப்பதற்கு தண்ணீர் எடுக்க,தெருவில் உள்ள  அடி பைப்பை  நம்பித்தான் வாழ்க்கை ஓடியது .அடிபைப்பில் தண்ணீர் எடுக்க இரவு நேரத்தில் வெகுநேரம் ஆகிவிடும் .அதன் பின்னர் வீட்டில் போர் (போர் வெல்) போட்டோம்.இருப்பினும் அடி பைப்பில் தண்ணீர் அடித்து எடுப்பது என்பது மிகவும் சிரமமான ஓன்று .புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில்   39 வார்டுகள்  உள்ளன . 39 வார்டு மக்களும் பயன் பெரும் வகையில் மக்களின் அடிப்படை தேவையான தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டவர் என்ற பெருமை, அருமை சகோதரர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் விஜயபாஸ்கர்
அவர்களையே சேரும்.39 வார்டுகளிலும் மினி பவர் பம்ப் அமைத்து,மக்கள் சிரமம் இல்லாமல் தண்ணீர் பெற உதவியவர் டாக்டர்
அவர்கள்தான்   .மிக சிறுவயதில் புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய பெருமை டாக்டர் அவர்களையே சேரும்.
அரசினர் பொது மருத்துவ மனைக்கு CT ஸ்கேன் பெற்று தந்த பெருமை மட்டும் அல்லாது நகரின்  மிக முக்கியமான இடங்களில் டிராபிக் சிக்னல் பெற்று தந்த பெருமையும்  அவரையே சேரும்.டாக்டர் அவர்களின் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

1 comment:

  1. டாக்டர்அவர்களின் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete