Pages

Thursday, December 2, 2010

ஆங்கிலம்

நாம் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் மொழி நமக்கு தாய் மொழி ஆக இருந்தாலும் ,ஆங்கிலம் தெரியாமல் இனி இந்த உலகில்  வாழமுடியுமா என்பது சந்தேகம் தான் ,ஏனெனில் ஆங்கிலம் இன்று மக்களின் சுவாசமாக மாறிவிட்டது ,ஆங்கிலம் இல்லாமல் வாழ்வது கடினம் தான் ,சாதாரணமாக  வங்கிகளில் பணம் போட வருபவர்கள் ஆங்கிலத்தில் உள்ள ஸ்லிப்பில் தான் பூர்த்திசெய்ய வேண்டிய நிலை உள்ளது ,எனவே ஆங்கிலம் நம் வாழ்விற்கு அத்தியாவசியமான ஓன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது .மறுத்தால் மறுப்பவர் தனி உலகத்தில் தான்  வசிக்க முடியும் .ஆங்கிலத்தை கற்று  கொள்வது கடினமானதா என கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லவேண்டும் ,ஏனெனில் ஆங்கிலம் மிகவும் எளிமையான மொழி .கற்றுகொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும் குறுகிய காலத்தில் கற்று கொள்ளலாம் .ஆங்கிலத்தை கற்று கொள்ள ஆர்வம் மட்டும் போதுமா என்று கேட்டால் போதும் என்று தான் சொல்லலாம் .எந்த வயதில் வேண்டுமானாலும்  கற்கலாம்.

No comments:

Post a Comment