Pages

Wednesday, December 1, 2010

அண்ணன் மோகன் அவர்களின் சேவை விண்ணை தொட்டது

ராஜா ,மணி ,சுரேஷ் கண்ணன் ஆகியோர் இணை பிரியாத நண்பர்கள் .அவர்கள் தினமும் அறட்டை அடித்துக்கொண்டு அமர்ந்திருப்பது மாவட்ட மைதானத்தில் தான் .அங்குதான் போலீஸ் தொந்தரவு இருக்காது என இரவில்   நீண்ட நேரம் அமர்ந்திருப்பது வழக்கம் .வழக்கம் போல் அரட்டை   கச்சேரி ஆரம்பமாகி அவர்களின் பேச்சு வானத்தை பற்றியும் ,அதில் உள்ள நட்சத்திரங்கள் பற்றியும் அரட்டை அரங்கம்  வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தது ,திடீரென வானத்தில் பிரகாசமான ஒளி அவர்களை நோக்கி வந்தது ,நண்பர்கள் அனைவரும் பயந்து நடுங்கி  விட்டனர்.நேரம் ஆக ஆக மைதானத்தில் மிக அருகில் பறக்கும் தட்டு ஓன்று காதை கிழிக்கும் ஒலியுடன் தரை இறங்கியது .நடுக்கத்துடன் நால்வரும் நின்று கொண்டிருக்க ,பறக்கும் தட்டின் கதவுகள் திறக்கப்பட்டு அதில் இருந்து மூக்கு நீள மான நான்கு  நபர்கள் ,அவர்கள்   அருகில் வந்தனர்     .நண்பர்கள்  நால்வரும் நடுக்கத்துடன் நின்றனர் ,அருகில் வந்த வேற்று கிரகத்தினர் ,பயப்பட வேண்டாம் நண்பர்களே ,உங்களிடம் ஒரு உதவி கேட்டு வந்துள்ளோம் எங்களது மொழியும் ,உங்களுடைய மொழியும் ஒன்றாக இருப்பதால் உங்களின் உதவியை நாடி வந்துள்ளோம் ,நண்பர்கள் நால்வரும் திகைத்து ,சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும் என கேட்டனர் ,புதுக்கோட்டை நகராட்சியின்   நகர் மன்ற  உறுப்பினர் அருமை சகோதரர் திரு எம் .மோகன் அவர்களையும் அவர் தனது பகுதி மக்களுக்காக செய்து கொண்டிருக்கும் சிறந்த சேவைகளை பாராட்டி அவரை கௌரவ படுத்த வேண்டும் ,தயவு செய்து அவரை நாளை இதே நேரத்தில் இதே இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம் என சொல்லி பணிவுடன் நின்றனர் .நண்பர்கள் நால்வரும் சரி என மகிழ்ச்சி உடன் சொல்ல ,பறக்கும்  தட்டு பறந்து சென்றது .அண்ணன் மோகன் அவர்களின் சேவை விண்ணை தொட்டது என்பது உண்மைதான் ,நாமும் அண்ணன் மோகன் அவர்களின் சேவையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் .

No comments:

Post a Comment