கல்யாண சந்தையிலே ........கன்னியரும்
கண்ணிரு சிந்தையிலே
தட்சணை எதற்கடா -வரதட்சணை எதற்கடா
ஓகோ .............ராமர்களே !
ஜானகி ராமர்களே !
ஜானகியை மணப்பதற்கு
ஜனகன் இரும்பு பெட்டி
உங்களுக்கு எதற்கு .....?
கரும்பு தின்னக் கூலிகேட்கும்
இரும்பு மனம் படைத்தோரே
அரும்பி நிற்கும் முல்லையவள்
விரும்பி நீயும் மணப்பதற்கு
தட்சணை எதற்கடா -வர
தட்சணை எதற்காடா
மாமியார் தரும் பணத்தில்
மாமாங்கம் வாழ்பரே !
சாமியார் வாழ்க்கையல்ல - இது
சம்சார வாழ்க்கையடா !
பிறதட்சனையைப் பெறத்தானோ
பெற்றெடுத்திர் பிள்ளைகளை -ஆன் பிள்ளைகளை !
வரதட்சனை கொடுத்து தானோ
வார் குழலான் வரவேண்டும் மடி மீது !
வரும் தட்சணை வாங்கித் தானோ -உங்கள்
வறுமையதை ஓட்டனுமோ !
பிரதட்சணை பெறத்தானோ
பெற்றெடுத்திர் பிள்ளைகளை -ஆன் பிள்ளைகளை !
பெரும் பிச்சை என்றே தெரியாதோ !
கடை தெருவே சென்றாலும் -ஆசையில்
கடைப் பொருளை வாங்கினாலும் -காசதை
இல்லை கடைகாரரிடம்
பொருளையுமே வாங்கிவிட்டு
காசையும் கேட்கின்றோம்
இல்லை கடைகாரரிடம்
பொருளையுமே வாங்கி விட்டு
காசையும் கேட்கின்றோமே?-நாம்
காசையும் கேட்கின்றோமே?-
இல்லை ... இல்லை ....இல்லையே !
நாம் தானே கொடுக்கின்றோம் -காசு
நாம்தானே கொடுக்கின்றோம்
வாழ்க்கை துவங்க
வரதட்சனை கேட்பவன்
வாழும் நாட்டின் அகதி ஆவான்
மிதவாதி காந்தி கூட -கருத்தில்
தீவிரவாதி ஆகிச் சொன்னான் இதையே !
வரதட்சனை வரதட்சனை -பெண்ணைப்
பெற்றவர் வீட்டில்
வறுமை கொடி நாட்ட
வந்ததுதான் வரதட்சனை
வரதட்சனை நடைமுறை
வழக்கிலே தப்பென்றால்
கொடுப்பவரை யாரும் கண்டிக்கவுமில்லை !
கொள்பவரை யாரும் தண்டிக்கவுமில்லை
வரதட்சனை வரதட்சனை -பெண்ணைப்
பெற்றவர் வீட்டில்
வறுமை கொடி நாட்ட
வந்ததுதான் வரதட்சனை
வரதட்சனை நடைமுறை
வழக்கிலே தப்பென்றால்
கொடுப்பவரை யாரும் கண்டிக்கவுமில்லை !
கொள்பவரை யாரும் தண்டிக்கவுமில்லை
பின் என்ன
பின் தொடரத்தான் செய்யும்
பெண்சிசுக்கொலை என்பதும் !
இந்நிலை தொடர்ந்தால் -இனி
வருன்காலத்தே
வனிதை யெனும் மனமகளால்
இறக்குமதி சரக்காவாள்
பன்னாட்டு இறக்குமதியில்
பாவை மயிலாவாள்
பைசா கொடுத்தா -ஆடவனை
மணக்க வருவாள்
கன்னாளான் காசு கொடுத்தே
கல்யாணம் செய்தாலும்
எந்நாளும் இயல்பாய்
இருந்திடவா போகிறாள் ?
வேசம்தான் போடுவாள் வெளிநாட்டுக்காரி -அவள்
பாசம் படுவாளா -இல்லை
நேசம் தான் தேடுவாளா ?
ஐயகோ பரிதாபம்
அது இல்லை வெகு தூரம்
நடக்கப்போகிறது நாட்டில் -ஆண்
நயவஞ்சகக் காட்டில்.............................................................................
பின் தொடரத்தான் செய்யும்
பெண்சிசுக்கொலை என்பதும் !
இந்நிலை தொடர்ந்தால் -இனி
வருன்காலத்தே
வனிதை யெனும் மனமகளால்
இறக்குமதி சரக்காவாள்
பன்னாட்டு இறக்குமதியில்
பாவை மயிலாவாள்
பைசா கொடுத்தா -ஆடவனை
மணக்க வருவாள்
கன்னாளான் காசு கொடுத்தே
கல்யாணம் செய்தாலும்
எந்நாளும் இயல்பாய்
இருந்திடவா போகிறாள் ?
வேசம்தான் போடுவாள் வெளிநாட்டுக்காரி -அவள்
பாசம் படுவாளா -இல்லை
நேசம் தான் தேடுவாளா ?
ஐயகோ பரிதாபம்
அது இல்லை வெகு தூரம்
நடக்கப்போகிறது நாட்டில் -ஆண்
நயவஞ்சகக் காட்டில்.............................................................................